பக்கம் எண் :

654யுத்த காண்டம் 

928.

துடி, தவண்டை, சங்கு, பேரி, துந்துமிக் குலங்கள்,

கைத்

தடி, துவண்ட ஞாண், இரங்கு தக்கையோடு பம்பை,

மற்று

இடி பொதிந்த முரசம் ஆதி எண் இல் பல்லியக்

குழாம்

படி நடுங்கவே, பகைக் களத்தின் ஓசை விஞ்சவே.

(83-3)
 
929.

இரைத்து அடர்ந்து அரக்கர் வெள்ளம், எண் இல்

கோடி, இடைவிடாது

உருத்தல் கண்டு, இராகவன் புன்முறுவல் கொண்டு,

ஒவ்வொருவருக்கு

ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ,
சரத்தின் மாரி பெய்து, அரக்கர் தலை தரைக்கண்

வீழ்த்தினான்.

(83-4)
 
930.

'நுனித்திடத்திற்கு அருங் கடுப்பின் நொடிவரைக்குள்

எங்குமாய்க்

குனித்த வில் கை வாளி மாரி மழை சொரிந்து

கோறலால்,

மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று

நன்று' எனா,

வினைத் திறத்து அரக்கர் விம்மிதத்தர் ஆய்,

விளம்புவார்.

(83-5)
 
931.

'விண்ணின்மீது அனந்த கோடி வீரன்' என்பர்; 'அல்ல

இம்

மண்ணின்மீது அனந்த கோடி மனிதன்' என்பர்;

அல்ல வெங்

கண்ணினூடு அனந்த கோடி கண்ணன்' என்பர்;

'அல்ல உம்

எண்ணமீது அனந்த கோடி உண்டு, இராமன்'

என்பரால்.

(83-6)