பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்655

932.

இத் திறத்து அரக்கர் வெள்ளம் எங்கும் ஈது இயம்ப,

நின்று

எத் திறத்தினும் விடாது, இராமன் எங்கும் எங்குமாய்
அத் திறத்து அரக்கரோடும், ஆனை, தேர், பரிக்

குலம், 

தத்துறச் சரத்தின் மாரியால் தடிந்து, வீழ்த்தினான்.

(83-7)
 
933.

இடைவிடாது அளப்பு இல் வெள்ளம் இற்று இறந்து

போகவும்

படை விடாது அரக்கர் ஆளிபோல் வளைந்துபற்றவும்,
கொடைவிடாதவன் பொருள் குறைந்திடாதும்

வீதல்போல்,

தொடைவிடாது இராமன் வாளி வஞ்சர்மீது

தூவினான்.

(83-8)
 
934.

இன்னவாறு இராமன் எய்து, சேனை வெள்ளம்

யாவையும்,

சின்னபின்னமாக, நீறு செய்தல் கண்டு, திருகியே,
மின்னு வாள் அரக்கர் வெள்ளம், எண்ணில் கோடி,

வெய்தினின்

துன்னி, மூடும் அந்தகாரம் என்ன வந்து சுற்றினார்.

(96-1)
 
935.

வானின்மீது அனந்த கோடி மாய வஞ்சர் மண்டினார்,
ஆனைமீது அனந்த கோடி அடல் அரக்கர்

அண்மினார்;

சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர்

சுற்றினார்,

மீன வேலை ஒத்து அனந்த கோடி வஞ்சர் மேவினார்.

(96-2)
 
936.

அடல் வார் சிலை அமலன் சொரி கனல் வெங்

கணை கதுவி,

தொடர் போர் வய நிருதக் கடல் சுவறும்படி பருக,