| படுமாறு அயல் வரு தீயவர் பல கோடியர் பலரும் சுடர் ஏறிய படை மாரிகள் சொரிந்தார், புடை | |
வளைந்தார். | (101-1) |
|
937. | கோல் பொத்திய நெடு நாணினில் கோமான் தொடை | |
நெகிழ |
மேல் பொத்திய நிருதக் குலம் வேரொடு உடன் |
விளிய, |
தோல் பொத்திய உயிர் யாவையும் தொடக்கற்று |
உடன் மடிய, |
கால் பொத்திய கை ஒத்தன, காகுத்தன் வெங் |
கணையால். | (102-1) |
|
938. | அது போது அகல் வானில் மறைந்து, அரு மாயை | |
செய் அரக்கர், |
எது போதினும் அழிவு அற்றவர், இருள் வான் உற |
மூடி, |
சத கோடிகள் கணை மாரிகள் தான் எங்கும் |
நிறைத்தார்; |
சது மா மறை அமலன் அவை தடிந்தான், தழற் |
படையால். | (108-1) |
|
939. | அமலன் விடும் அனல் வெம் படை அடு வெம் | |
பொறி சிதறி |
திமிலம்கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும் பிமரம் கெட, அவர்தம் உடல் பிளவுண்டு உயிர் |
அழிய, |
சமரம் புகும் அளவு இல்லவர்தமை வென்றது, ஓர் |
நொடியின். | (108-2) |
|
940. | காலாள் எனும் நிருதப் படை வெள்ளம் | |
கடைகணித்தற்கு |
ஏலாதன பல கோடிகள் இமையோர் கரை காணார்; பாலாழியின் மிசையே துயில் பரமன் சிலை பொழியும் கோலால் அவர் குறைவுற்றனர்; குறையாதவர் |
கொதித்தார். | (112-1) |