பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்657

941.

கொதித்தார் எழு கடல்போல் வளைவுற்றார்; கொடு

முசலம்

குதித்து ஓடிய சிலை வாளிகள், கூர் வேல், கதை,

குலிசம்.

விதைத்தார், பொரும் அமலன்மிசை வெய்தே; பல

உயிரும்

விதித்தானையும் விதித்தான் சிலை வளைத்தே, சரம்

விதைத்தான்.

(112-2)
 
942.

கொள்ளை வெஞ் சமர் கோலும் இராக்கத
வெள்ளமும் குறைவுற்றது; மேடொடு
பள்ளம் இன்றிப் படும் குருதிக் கடல்
உள்ள வான் கடற்கு ஓடியது இல்லையால்.

(127-1)
 
943.

தேயம் எங்கும் இடம் சிறிது இன்றியே,
மாய வஞ்சர் மடிய, பிண மலை
போய் வளர்ந்து விசும்பொடும் புல்லிற்றால்;
ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே.

(127-2)
 
944.

கடல் எரிக்க கனற் படை கார்முகத்து -
இடை தொடுத்து, அதை ஏவி, 'இரும் பிணத்
திடல் அனைத்தையும் தீர்க்க' எனச் செப்பினான்;
பொடி - படுத்தி இமைப்பில் புகுந்ததால்.

(127-3)
 
945.

அண்டம் முற்றும் அனைத்து உயிரும் எடுத்து
உண்டு உமிழ்ந்து படைக்கும் ஒருவனுக்கு
உண்டு எனற்கு அரிது என்? உளது இச் செயல்.
எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால்.

(127-4)
 
946.

இற்றது ஆக இராக்கத வீரர்கள்
உற்று, ஓர் ஆயிர வெள்ளம் உடன்று, எதிர்
சுற்றினார், படை மாரி சொரிந்துளார்;
வெற்றி வீரனும் கை வில் வணக்கினான்.

(127-5)
 
947.

தலை அறுந்தவரும், தடத் திண் புய
மலை அறுந்தவரும், வயக் கையொடு