பக்கம் எண் :

660யுத்த காண்டம் 

வென்றிடும் பதாதியர், அனந்த வெள்ளமும்
கொன்றனன், கொதித்து, ஒரு கடிகை ஏழினே.

(171-1)
 
962.

இவ் உரை வன்னி அங்கு இயம்ப. 'ஈதுபோல்
செவ் உரை வேறு இலை' என்று, தீயவர்
அவ் உரைக்கு அனைவரும் அமைந்து, அங்கு

(177-1)

அண்ணலோடு

எவ் உரையும் விடுத்து, அமரின் ஏற்றுவார்.

 
963.

இன்னவர் ஐ - இரு கோடி என்று உள
மன்னவர் சதமுகம் உடையர்; மற்று அவர்
துன்னினர், மனத்து அனல் கறுக்கொண்டு ஏறிட
உன்னினர், ஒருவருக்கு ஒருவர் ஓதுவார்.

(184-1)
 
964.

அடல் ஐ - இரு கோடி அரக்கர் எனும்
மிடல் மன்னவர் வீரனொடும் பொருவார்;
கடை கண்டிலர், காய் கரி, தேர், பரிமாப்
படை கண்டிலர்; கண்டிலர், பட்ட திறம்.

(206-1)
 
965.

அங்கு அங்கு அவர்தம்மொடும் ஐயன் உயிர்க்கு
அங்கு அங்கு உளன் என்பது தான் அறியாற்கு,
எங்கு இங்கும் இராமன் இராமன் எனா,
எங்கு எங்கும் இயம்பவும் உற்றுளனால்.

(212-1)
 
966.

ஏயும் ஐ - இரண்டு கோடி இறைவர் ஒவ்வொருவர்

(213-1)

சேனை

ஆயிர வெள்ளம்தானும் அத் துணை வெள்ளம் ஆகி,
தூயவன் அவர்தம் சேனை தொலைத்தபின், இறைவர்

ஆவி

போய் அறப் பகழி மாரி பொழிந்தனன், பொன்றி

வீழ்ந்தான்.

 
967.

இட்டதோர் பேயரின் ஈர் - ஐயாயிரம்
பட்டபோது, ஆடும் ஓர் படு குறைத்தலை
சுட்ட நூறாயிரம் கவந்தம் ஆடிடத்
தொட்டனன், சிலை அணி மணி நுணுக்கென.

(220-1)