| 968. | மாத்திரைப் போதினில், மணி தொனித்திட, போர்த் தொழில் அரக்கர்மேல் பொருத பூசலில், ஏத்திடை இடைவிடாது ஏழு நாழிகை கீர்த்தியன் சிலை மணி கிணிகிணென்றதே. | (220-20) |
| |
| 969. | மொய்த்தனர், நூறு வெள்ள முரண் படைத்தலைவர் | (222-1) |
கூட்டம், |
பத்து நூறு ஆய வெள்ளப் படையொடு மாயை பற்றி, ஒத்த யோசனை நூறு என்ன ஓதிய வரைப்பின் |
ஓங்கி, |
பத்து எனும் திசையும் மூடி, சொரிந்தனர் படையின் |
மாரி. |
| |
| 970. | யோசனை நூற்றின் வட்டம் இடையறாது உற்ற | (222-2) |
சேனைத் |
தூசி வந்து, அண்ணல்தன்னைப் போக்கு அற |
வளைத்துச் சுற்றி, |
வீசின படையும் அம்பும் மிடைதலின், விண்ணோர் |
யாக்கை |
கூசினர், பொடியர் என்றும் குமிழ்த்தனர், ஓமக் |
கூடம். |
| |
| 971. | முன்னவன் அதனை நோக்கி, முறுவலித்து, அவர்கள் | (222-3) |
ஏவும் |
பல் நெடும் பருவ மாரிப் படை எலாம் பொடிபட்டு |
ஓட, |
தன் நெடுஞ் சிலையின் மாரிதனக்கு எழு முகிலும் |
அஞ்சத் |
துன்னுவித்து, அரக்கர் சேனையைத் தொலைத்தல் |
செய்தான். |
| |
| 972. | கால வெங் கனலின் மாயக் கடும் படை சிலையின் | |
பூட்டி, |
| மேலவன் விடுதலோடும், வெம் படை அரக்கர் |
வெள்ளம் |