பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்7

'நீறு பூசியும்  நேமியும் -  திருநீறு   பூசிய  சிவனும், சக்கரப்
படை தாங்கிய திருமாலும்; மாறு குன்றொடு வேலை மறைந்துளார்
நீங்கினார்
- மேடும்   பள்ளமுமாய்   மாறுபட்டுள்ள   மலையிலும்
கடலிலும்   மறைந்துள்ளவர்களாய்  (முன்பு உன் எதிரில் வராமல்) 
விலகிக்கொண்டனர்; ஊறு நீங்கினராய், உவணத்தினோடு ஏறும் 
ஏறி உலாவுவார்' என்னுமால்
- (இப்பொழுது) துன்பம் நீங்கப் 
பெற்றவராய்   கருடன்  மீதும்   ஏற்றின்  மீதும்  ஏறிக்கொண்டு 
உலாவுவார்கள்' என்று கூறுவான்.
 

நீறு பூசியும் நேமியும் குன்றொடு வேலை மறைந்துளார் என்பது
நிரல் நிறைப் பொருள்கோள். 'உவணத்தினோடு ஏறும் ஏறி'
என்பது எதிர் நிரல் நிறைப்பொருள்கோள். 
 

(12)
 

9198.

'வான மானமும், வானவர் ஈட்டமும், 

போன போன திசை இடம் புக்கன, 

தானம் ஆனவை சார்கில; சார்குவது, 

ஊன மானிடர் வென்றிகொண்டோ?' எனும். 

 

'வானவர் ஈட்டமும் வானமானமும் - தேவர்களின் கூட்டமும்
அவர்கள் ஏறிச் செல்லுதற்குரிய வானவிமானமும்; போன போன
திசை  இடம்  புக்கன
-   (இந்திரசித்தின்  முன்னிற்கவியலாது)
போன போன   திசையிடங்களில்   புகுந்தனவாய் மறைந்திருந்து,;
தானம்   ஆனவை  சார்கில  சார்குவது- தம் இருப்பிடத்தை
இதுகாறும் சேர்ந்தில, அவை மீண்டும் சேர்வது; ஊன மானிடர்
வென்றி கொண்டோ?' எனும்
- குறைபாடுடைய மனிதர்களின்
வெற்றியைத் துணையாகக்கொண்டு தானோ?' என்பான்.
 

மானம் - விமானம் என்பதன் முதற்குறை. 'ஈட்டம்' என்னும்
அஃறிணை 'சார்கில' என்னும் அஃறிணை முடிவு கொண்டது. தானம்
- ஸ்தானம் அவரவர் இருப்பிடமாம். உயர்வுடைய தேவர்கள்
குறைபாடுடைய மனிதர்கள் பெற்ற வெற்றியைத் துணையாகக்
கொண்டு தத்தம் தானத்தை அடைவது பெருமைக்குரியதாயிற்றோ?
என்றவாறு. 
 

(13)
 

9199. 

'கெட்ட தூதர் கிளத்தினவாறு ஒரு 

கட்ட மானிடன் கொல்ல, என் காதலன் 

பட்டு ஒழிந்தனனே!' எனும்; பல் முறை 

விட்டு அழைக்கும்; உழைக்கும்; வெதும்புமால்.