பக்கம் எண் :

70யுத்த காண்டம் 

குறைத்து - உடல்கள்  சிதையும்படி வெட்டி; உயிர் உண்பென்-
உயிரைக்   குடிப்பேன்;   நீயிர்  ஒருங்கே  போய் - நீங்கள்
யாவரும் ஒன்றாகச் சென்று; மற்றவர் ஆன இருவரை - வானரர்
தவிர    இராம    இலக்குவராகிய    இருவரை;     கோறிர்-
கொல்லுவீர்களாக; என்று அறைந்தான்- என்று கட்டளை இட்டான்.
 

தானவர் - அரக்கரில் ஓர் இனத்தார். இராவணன் இவர்களை
அழித்த செய்தி உத்தரகாண்டத்துள் பேசப்படுகிறது என்பர். 
 

(1)
 

9300.

என உரைத்தலும், எழுந்து, தம் இரதமேல் ஏறி, 

கனை திரைக் கடல் சேனையைக் கலந்தது காணா, 

'வினையம் மற்று இலை; மூல மாத் தானையை 

விரைவோடு

இனையர் முன் செல, ஏவுக!' என்று இராவணன் 

இசைத்தான்.

 

என உரைத்தலும் - மேற்கண்டவாறு இராவணன்  கட்டளை
இட்டவுடனே; எழுந்து- புறப்பட்டு;  தம் இரதம் மேல்  ஏறி -
தங்களுக்குரிய தேர்களில் ஏறி; கனை திரைக் கடல் சேனையைக் 
கலந்தது காணா
- ஒலிக்கும் கடல்மேல் பரந்த தம் சேனைகளோடு 
அரக்கத்  தலைவர்கள்  சென்று  சேர்ந்ததைக் கண்டு;  வினையம் 
மற்று இலை
- இனிச் செய்யத்தக்க பணி வேறு இல்லை; மாமூலத் 
தானையை
-  பெரிதாகிய மூல  பல சேனையை;  இனையர் முன் 
விரைவோடு   செல  ஏவுக  என்று
-   இப்போது போருக்குப் 
போகின்ற    இவர்களுக்கு  முன்னே  வேகமிகச் செல்லும்படியாக 
ஏவுவீர்களாக   என்று;   இராவணன் இசைத்தான் - இராவணன் 
(மேலும்) கட்டளை இட்டான். 
  

(2)
 

9301.

ஏவி அப் பெருந் தானையை, தானும் வேட்டு  

எழுந்தான்,

தேவர் மெய்ப் புகழ் தேய்த்தவன், சில்லிஅம்

தேர்மேல்,

காவல் மூவகை உலகமும் முனிவரும் கலங்க, 

பூவை வண்ணத்தன் சேனைமேல் ஒரு புறம்  

போனான்.

 

அப்பெருந்தானையை ஏவி - அந்தப் பெரிய மூலபலச் சேனையை
இராமனை எதிர்த்தழித்திடுமாறு ஏவியபின்; தேவர்