1192. | அடைந்த மா முனித் தலைவனை அருச்சனை செய்து, | |
| மிடைந்த சேனைஅம் பெருங் கடல் சூழ்தர, மேல் | |
| நாள் | |
| கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி, வானவர்கள் | |
| படிந்து போற்றிட இருந்தென, பரிவுடன் இருந்தான். | |
| | (189-2) |
| | |
1193. | இருந்தபோது, இராமன்தன்னை இருடியும் இயம்பும்; | |
| எந்தாய்! | |
| பெருந் திறல் இலங்கைதன்னை எங்ஙனம், | |
| பெரியோய்! நீயே | |
| வருந்தினை, குரங்கு கொண்டு, மாய வல் அரக்கன் | |
| தன்னைத் | |
| திருந்த அப் போரில் வென்று மீண்டவா செப்புக! | |
| என்றான். | (189-3) |
| | |
1194. | இராகவன் அவனை நோக்கி, 'இறந்த வாள் அரக்கர் | |
| எல்லாம் | |
| அராவின் மாருதியும், மேன்மை வீடணன்தானும், | |
| ஆங்கே | |
| குராவருஞ் சேனை எல்லாம் கொன்றிட, கொற்றம் | |
| கொண்டு | |
| விராவியே மீண்டது' என்று, மீளவும் பகரலுற்றான்: | |
| | (189-4) |
| | |
1195. | 'தந்திரம் உற்ற சேனை தரைப்பட, மறுப்படாமல் | |
| அந்தரம் உற்ற போது, அங்கு அரு மருந்து அனுமன் | |
| தந்தான்; | |
| மந்திர வித்தே! எம்பி வரி சிலை வளைத்த போரில் | |
| இந்திரசித்தும் பட்டான்; இலங்கையும் அழிந்தது | |
| அன்றே. | (189-5) |
| | |
1196. | 'கறங்கு கால் செல்லா, வெய்ய கதிரவன் ஒளியும் | |
| காணா, | |
| மறம் புகா, நகரம்தன்னில் வானவர் புகுதல் வம்பே; | |