பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்707

திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர்; தேரும்

காலை,

அறம் புகா மறத்தினாலே அழிந்தது அப் பதியும்,

ஐயா!

(189-6)
 
1197.

'மறக் கண், வெஞ் சினத்தில் வன்கண், வஞ்சக

அரக்கர் யாரும்

இறக்க, மற்று இறந்தது எல்லாம் எம்பிதன் ஈட்டின்,

எந்தாய்!

பிறப்பு மேல் உளதோ? சூழ்ந்த பெருந் திசை பேரின்,

பேராத்

துறக்கத்தோ, யாதோ, பெற்றார்? அறிந்தருள், சுருதி

நூலோய்!

(189-7)
 
1198.

என்ற வாசகம் இருந் தவன் கேட்டு, இகல் இராமன்

தன் துணைப் பெருந் தம்பியைத் தழுவி, 'நீ

தக்கதோய்!

வென்று மீண்டிலைஆயின், அவ் விண்ணவர் முனிவர்

பொன்றுமாறு அன்றி, ஆர் உயிர் புரப்பது ஒன்று

உளதோ?

(189-8)
 
1199.

மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு,

மறையோன்

பாதம் முந்துற வணங்கி, மா முனிவனைப் பாரா,

'ஏதும் யான் செய்தது இல்லை; அவ் இலங்கைமேல்

வெகுண்டு

வேத நாயகன் புருவத்தை நெரித்தனன்; விளிந்தார்.

(189-9)

 

1200.

'அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென்;

அது அத்

துன்று தார் புனை மாருதி பெரும் புயத் துணையால்

வென்றி கொண்டனம், யாங்கள், மேல் விளம்புவது

எவனோ?'

என்று இயம்பினன், இருடிக்கும் இளவலும் இயைந்தே.

(189-10)