1201. | அனுமன் என்பவன் வாள்முகம் நோக்கினன்; அவனும் | |
| புனித மா தவன்தனைத் தொழா, 'புண்ணியப் | |
| பொருளாம் | |
| தனு வலம் கொண்ட தாமரைக்கண்ணவன் தனயன் | |
| எனும்அது என்கொலோ? யாவர்க்கும் தந்தை நீ' | |
| என்றான். | (189-11) |
| | |
1202. | அங்கு அவன் சொல, அனுமனும் உரைசெய்வான், | |
| அருணப் | |
| பங்கயந்தனில் சீதையாம் பராபரையாட்டி | |
| சங்கரன் அயன்தன்னையும் தரணி ஈர்-ஏழும் | |
| தங்கு பொன் வயிற்று அன்னைதன் தன்மையை | |
| நிகழ்த்தும். | (189-12) |
| | |
1203. | 'இராகவன் பெருங் குலத்தையும், இப் பெருஞ் | |
| செல்வத் | |
| தராதலம் புகழ் சனகன்தன் மரபையும், தந்து, என் | |
| பராபரத்தினைப் பங்கயத்து அமுது எனப் பணிந்தாள்: | |
| புராதனர்க்கு அரசே!' என மாருதி புகன்றான். | (189-13) |
| | |
1204. | அன்ன வாசகம் கேட்டலும், அந்தணர் கோவும், | |
| 'என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது, யாம்? | |
| என்று, | |
| ஒன்றும் வாசகம் உரைத்திலன்; உள் அன்பு குளிர, | |
| 'அன்னை வாசவன் திருவினைத் தந்தது' என்று | |
| அறைந்தான். | (189-14) |
| | |
1205. | பண் குலாவிய சுக்கிரீவன்தனைப் பாரா, | |
| கண்குலா மனம் களித்தவன் கழல்மிசைப் பணிந்து, | |
| மண்குலாம் புகழ் வீடணன், 'நீலனே முதலாம் | |
| எண்கின் வேந்தனும் அழித்தனர் இலங்கையை' | |
| என்றான். | (189-15) |