பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்71

மெய்ப்புகழ் தேய்த்தவன் - தேவர்களின் மெய்யான புகழை
அழித்தவனாகிய  இராவணன்;  வேட்டு- போர் செய்தலை
விரும்பி;  சில்லி  அம் தேர்மேல்- சக்கரங்கள் கொண்ட
அழகிய தேர் மீது; தானும் எழுந்தான் - தானும் ஏறியவனாய்;
காவல் மூவகை உலகமும் - தன் ஆட்சியில் உள்ள மூன்று
உலகத்தவரும்; முனிவரும்- முனிவர்களும்; கலங்க - மனம்
கலங்கும்படியாக; பூவை வண்ணத்தன் சேனைமேல்- பூவைப் 
பூவின் நிறம் கொண்டவனாகிய இராமனுக்கு உதவியாக வந்த 
சேனையை எதிர்த்து; ஒரு புறம் போனான் - (மூலபலப்படை 
ஒருபுறம் போக) தான் வேறு ஒரு பக்கம் போனான்;
 

(3)
 

மூல பலப் படையின் சிறப்பு
 

9302.

'எழுக, சேனை!' என்று, யானைமேல் மணி முரசு 

ஏற்றி,

வழு இல் வள்ளுவர் துறைதொறும் விளித்தலும், 

வல்லைக்

குழுவி ஈண்டியது என்பரால், குவலயம் முழுதும் 

தழுவி, விண்ணையும் திசையையும் தடவும் மாத்

தானை,

 

வழு இல் வள்ளுவர்- தம் கடமையில் குற்றம் இல்லாத
(முரசறையும்) வள்ளுவன்மார்; யானை மேல் மணி முரசு ஏற்றிக்
- யானை மீது இருந்த அழகிய முரசுகளை அறைந்து; எழுக சேனை
என்று
- சேனைகள் எழுவதாக என்று; குவலயம் முழுதும் தழுவி -
உலகம் முழுவதையும் அளாவி; விண்ணையும் திசையையும் தடவும்
மாத்தானை
- ஆகாயத்தையும் திசைகளையும் வருடுகின்ற பெரிய
(மூலபலச்) சேனையானது; வல்லை- விரைவாக; ஈண்டியது என்பர்
- கூடியது என்பர்.
 

ஆல் - அசை. 
 

(4)
 

9303.

அடங்கும் வேலைகள், அண்டத்தின் அகத்து; அகல் 

மலையும்

அடங்கும், மன் உயிர் அனைத்தும், அவ் வரைப்பிடை 

அவைபோல