பக்கம் எண் :

710யுத்த காண்டம் 

1211.

திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய,

ஆண்டு

இருந்தபோது, தன் திருவுளத்து இராகவன்

நினைந்தான்;

'பொருந்த மா முடி புனைக!' எனப் பொருந்துறான்,

போத

வருந்து தம்பிக்கு, 'வருவென் யான்' என்பதோர்

வாக்கை

(189-21)
 
1212.

முனிவன் இம் மொழி கூறலும், முது மறைப்

பெருமான் -

தனை நினைந்து உளம் வருந்திய தம்பிபால் அயரும்

மனம் நெகிழ்ந்து, இரு கண்கள் நீர் வார, அங்கு

அமலன்

நினைவின் முந்துறும் மாருதிக்கு, இனையன

நிகழ்த்தும்.

(193-1)
 
1213.

அன்று அவர் தம்மை நோக்கி, அந்த மா தவனும்

'இந்த

வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு

சயனம் மற்றும்

குன்றினில் அருளும்' என்று கூறலும், வான நாட்டுள்

ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து, ஒருங்கு

வந்தார்.

(198-1)
 
1214.

மாருதி விடைகொண்டு ஏக, வரதனும் மறையோன்

பாதம்

ஆர் அருளோடு நீட வணங்கினன்; அவனும் ஆசி

சீரிது கூறி, 'சேறி' என்றலும், மானம் சேர்ந்து,

போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து

போனான்.

(201-1)
 
1215.

'மான் நேர் விழியாளுடனே வனம் முன் 

போனான் ஒரு நாள்; வரும் நாள் இலதோ? 

தேனே! அமுதே! தெளிவே! தெளிவின் 

ஊனே! உயிரே! உலகு ஆளுடையாய்! 

(201-2)