பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்711

1216.

'அம் பவளச் செவ் வாய், அணி கடகச் சேவகன்,

வம்பு அவிழும் சோலைக் கோசல நாடுடை வள்ளல்,

எம் பெருமான் என்னை, இழி குணத்து நாயேனை,

'தம்பி' என உரைத்த தாசரதி தோன்றானோ!

(201-3)
 
1217.

வாழி மலைத் திண் தோள் சனகன்தன் மா மயிலை,

ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை,

''தாழ்வு இல் பெருங் குணத்தாள்தான் உன்

கொழுந்தி; நீ

தோழன்'' என உரைத்த தோன்றலார் தோன்றாரோ!'

 

(201-4)
 
1218.

'துங்க வில் கரத் தோளினார் சொன்ன நாள்,

இங்கு வந்திலர், யான் இறப்பேன்' எனா,

மங்கைமாரும் படையும் வன் சுற்றமும்

அங்கு நீர்க் கங்கை அம்பியில் ஏற்றினான்.

(201-5)
 
1219.

'வேத நாதனும், வில்லியும், விரை மலர்த் திருவும்

ஏது செய்யினும், என் உயிர் முடிப்பேன்' என்று

எண்ணி,

ஓத நீரிடை ஓடம்அது உடைத்து, உயிர் விடுவான்,

காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான்.

(201-6)
 
1220.

'கண்ணும் தோளும் வலம் துடிக்கும்; கரை

வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே,

எண்ணும் காலையிலே, எழில் மாருதி,

'அண்ணல் வந்தனன்' என்று உரையாடினான்.

(201-7)
 
1221.

உள்ள வான் கிளை ஏற்றி, உயர் குகன்

வெள்ளக் கங்கையின் ஆக்கி, விரைந்து, அவண்

உள்ளும் நெற்றி உடைப்பளவில், புகும் 

வள்ளலார் விடும் மாருதி தோன்றினான். 

(201-8)
 
1222.

ஓங்கு வாலினை ஒட்டி, அவ் ஓடங்கள் 

தீங்கு உறாவகைச் சுற்றி, திருகி, நீர் 

ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான்; அவை 

தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால்.

(201-9)