1223. | 'கை ஆர் வெய்ய சிலைக் கருணாகரற்குக் | |
| காதலுடைத் தோழ- | |
| மை ஆர், சிருங்கவேரபுரம் உடையாய்! மிகு கோசலை | |
| களிறு, | |
| மை ஆர் நிறத்தான், வந்தொழிந்தான், மிதிலை வல்லி | |
| அவளுடனே; | |
| ஐயா! வந்தான் தம்பியோடும்; அடியேன் உய்ய, | |
| வந்தானே. | (201-10) |
| | |
1224. | 'ஆர்? உனை உரை' என, அனுமன் கூறுவான்; | |
| 'சீரிய வாயுவின் தோன்றல்; சீரியோய்! | |
| சூருடை, இராமற்குத் தூதன்' என்று எனது | |
| ஏருடைத் தலையின்மேல் எழுதப்பட்டுள்ளேன். | (201-11) |
| | |
1225. | பரதனனத் தீயையும் விலக்கி, பாருடை | |
| வரதனை, இராமனை, மாறிக் காண்பது | |
| சரதமே; இனி இறை தாழ்க்க ஒணாது' என, | |
| கரதலத்து ஆழியும் காட்டிப் போயினான். | (201-12) |
| | |
1226. | பரத்துவன் வருதலும், பரிந்து, இராமனும் | |
| கரத் துணை குவித்தனன், இளைய காளையோடு, | |
| எரித் திற முனியும் ஆசிகள் இயம்பிட, | |
| விருப்பொடும் இடவகை இனிது மேயினான். | (241-1) |
| | |
1227. | கோவொடு தூசு, நல் குல மணிக் குழாம், | |
| மாவொடு கரிக் குலம், வாவு தேர் இனம், | |
| தாவு நீர் உடுத்த நல் தரணிதன்னுடன், | |
| ஏ வரும் சிலை வலான், யாவும் நல்கினான். | (258-1) |
| | |
1228. | நின்றவன், 'இவ் வயின் நெடியவன்தனைச் | |
| சென்று இறைப் பொழுதினில் கொணர்வென், | |
| சென்று' எனா, | |
| பொன் திணி பொலங் கழல் வணங்கிப் போயினான், | |
| வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான். | (258-2) |
| | |
1229. | ஆய காலையில், ஐயனைக் கொண்டு, தன் | |
| தூய காவின் உறைவு இடம் துன்னினான்; | |