பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்713

'மேய சேனைக்கு அமைப்பென் விருந்து' எனா,

(258-3)

தீயின் ஆகுதி செங் கையின் ஒக்கினான்.

 
1230.

பான நெய்யோடு, நானமும், சாந்தமும், பலவும்

(258-4)

ஆன வெள்ளிலையோடு அடைக்காய், கருப்பூரம்

தேன் அளாவிய முக் கனி காயொடு தேன், பால்,

வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு

இழிந்தார்.

 
1231.

கங்கை தரு கழலாற்கும், இளவலுக்கும்,

(258-5)

காரிகைக்கும்,

துங்க முடி வீடணற்கும், சுக்கிரிவப் பெருமாற்கும்,

தங்கு பெருஞ் சேனைக்கும், தனித்தனியே, பொன்

கலத்தால்,

அங்கு அடைவின் மண்டலம் இட்டு, அணி விளங்க

நிறைத்தனரால்.

 
1232.

வெள்ளை நறும் போனகமும், மிகு பருப்பும், பொரிக்

(258-6)

கறியும்,

தள்ள அரிய முக்கனியும், சருக்கரையும், நறு நெய்யும்,

எள்ள அரிய பலவிதத்துக் கறியமுதும், இமையவர்தம்

வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை

படைத்தனரால்.

 
1233.

நீர் உலவி, நீர் குடித்து, நினைந்திருந்து, ஆகுதி

(258-7)

பண்ணி,

கார் உலவு மேனியனும், காரிகையும், இளங் கோவும்,

தேர் இரவி திருமகனும், தென் இலங்கைப்

பெருமானும்,

போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர்,

பொலிவால்.

 
1234.

'இரவி காதலன், இலங்கையர் கோன், இவர் உதவி

(258-8)

அரசின் ஆசையது என்னலாம்; அனுமனே! என்பால்

விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு

தருவது ஒன்று இலை, உடன் உணும் தரமது

அல்லால்'