பக்கம் எண் :

714யுத்த காண்டம் 

இதன்பின் 189-18, 19, 20 எண்ணுள்ள பாடல்கள் உள்ளன. 

 
1235.

'கொற்றவன் உடன் உண்ணுமோ? - கோது இல் 

மாதவனே!

வெற்றி வீரனே!' என அஞ்சி நின்றனன்; விமலன் 

மற்றப் போனகம் ஒரு கை வாய் வைத்தபின், வாராப் 

பற்றி, அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான். 

(258-9) 
 
1236.

பரிகலத்து அமுது ஏந்தியே, பந்திகள்தோறும்

இரவி காதலற்கு, அங்கதற்கு, இலங்கையர் வேந்தற்கு

உரிய வீரர்கட்கு அளித்து, தான் அவர்கள் ஓபாதி

வரிசையால் உண்ண, மா முனி விருந்தும்

உண்டனரால்.

(258-10)
 
1237.

பரிகலத்து ஒ(வ்)வோர் பிடிகொடு, பந்திகள்தோறும்

இரவி புத்திரற்கு, இலங்கையர், வேந்துக்கும் உதவி,

உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி, பின், அவனும்

வரிசையின் கொண்டு, மா முனி விருந்தும்

உண்டனனால்.

(258-11)
 
1238.

அன்ன காலையில் போனகம் அமரர் பொற்கலத்தே

முன்னம்போல் படைத்து, திருமுன்பு வைத்தனரால்,

உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும், பசி தீரா

மன்னன் மா முனி விருந்தும் உண்டு, அகம்

மகிழ்ந்தனனால்.

(258-12)
 
1239.

பான நல் அமுதுடன் கருப்பூரமும், பலவும் 

ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி, முன் நிற்ப 

தான மெய்ப் படைத் தம்முடைப் போகத்துள் தந்த 

ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான். 

 

(258-13)
 
1240.

அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர் - 

வண்ணனே முதல் வானரக் கடல் எலாம் வாய்ப

பெய்து,