இதன்பின் 189-18, 19, 20 எண்ணுள்ள பாடல்கள் உள்ளன. |
| | |
1235. | 'கொற்றவன் உடன் உண்ணுமோ? - கோது இல் | |
| மாதவனே! |
வெற்றி வீரனே!' என அஞ்சி நின்றனன்; விமலன் |
மற்றப் போனகம் ஒரு கை வாய் வைத்தபின், வாராப் |
பற்றி, அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான். |
| (258-9) |
| | |
1236. | பரிகலத்து அமுது ஏந்தியே, பந்திகள்தோறும் | |
| இரவி காதலற்கு, அங்கதற்கு, இலங்கையர் வேந்தற்கு |
உரிய வீரர்கட்கு அளித்து, தான் அவர்கள் ஓபாதி |
வரிசையால் உண்ண, மா முனி விருந்தும் |
உண்டனரால். | (258-10) |
| | |
1237. | பரிகலத்து ஒ(வ்)வோர் பிடிகொடு, பந்திகள்தோறும் | |
| இரவி புத்திரற்கு, இலங்கையர், வேந்துக்கும் உதவி, |
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி, பின், அவனும் |
வரிசையின் கொண்டு, மா முனி விருந்தும் |
உண்டனனால். | (258-11) |
| | |
1238. | அன்ன காலையில் போனகம் அமரர் பொற்கலத்தே | |
| முன்னம்போல் படைத்து, திருமுன்பு வைத்தனரால், |
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும், பசி தீரா |
மன்னன் மா முனி விருந்தும் உண்டு, அகம் |
மகிழ்ந்தனனால். | (258-12) |
| | |
1239. | பான நல் அமுதுடன் கருப்பூரமும், பலவும் | |
| ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி, முன் நிற்ப |
தான மெய்ப் படைத் தம்முடைப் போகத்துள் தந்த |
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான். |
| (258-13) |
| | |
1240. | அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர் - | |
| வண்ணனே முதல் வானரக் கடல் எலாம் வாய்ப |
பெய்து, |