பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்715

உண்ணும் வாசகம் கேட்டு, இமையோர், முனிவோரும்

மண்ணும், நாகரும், யாவரும், அருந் துயர் மறந்தார்.

(258-14)
 
1241.

மான வேந்தரும் வள்ளலும் மலர்க் கரம் விளக்கி,

ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி,

ஞான மா முனி பெருமையைப் புகழ்ந்து, நாயகனும்

பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து.

(258-15)
 
1242.

ஆர் இருள் அகலும்காலை, அமலனும், மறையோன்

பாதம்,

ஆர்வமொடு எழுந்து சென்று, வணங்கலும், அவனும்

ஆசி,

சீரிது கூறி, 'சேறி' என்றலும், தேர்மேல் கொண்டு,

சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து

சென்றான்.

(258-16)
 
1243.

விருந்தும் உண்டு, மா முனிவனை விடைகொண்டு,

தேர்மேல்

அருந்ததிக் கற்பினாளொடும் படையொடும்

அமைந்தான்;

வருந்து கோசல நாடுடன், அயோத்தியும் வாழ,

பரிந்து, இராமனும் ஏகினன், பரதனைக் காண்பான்.

(258-17)
  
1244.

இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான்

அயோத்தி எய்தி,

தராதல மகளும் பூவில் தையலும் மகிழ, சூடும்

அராவு பொன் மௌலிக்கு எய்ந்த சிகாமணி,

குணபால அண்ணல்

விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம்

செய்தான்.

(258-18)
 
1245.

இளவலை, ''அண்ணலுக்கு எதிர் கொண்ம்'' என்று,

நம்

வளை மதில் அயோத்தியில் வாழும் மக்களை,