| ''கிளையொடும் ஏகு'' எனக் கிளத்தி, எங்கணும் | |
| அளை ஒலி முரசுஇனம் அறைவிப்பாய்' என்றான். | |
| | (258-19) |
| | |
1246. | ''தோரணம நட்டு, மேல் துகில் பொதிந்து, நல் | |
| பூரணப் பொற் குடம் பொலிய வைத்து, நீள் | |
| வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச் | |
| சீர் அணி அணிக!'' எனச் செப்புவாய்' என்றான். | |
| | (258-20) |
| | |
1247. | பரத்துவன் உறைவிடத்து அளவும், பைம் பொன் நீள் | |
| சிரத் தொகை மதில் புறத்து இறுதி சேர்தர, | |
| வரத் தகு தரள மென் பந்தர் வைத்து, வான், | |
| புரத்தையும் புதுக்குமா புகறி, போய்' என்றான். | (258-21) |
| | |
1248. | என்றலும், அவன் அடி இறைஞ்சி எய்தி, அக் | |
| குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினான், | |
| நன்று உணர் கேள்வியன், நவை இல் செய்கையன், | |
| தன் துணைச் சுமந்திரற்கு அறியச் சாற்றினான். | (258-22) |
| | |
1249. | அவ் உரை கேட்டலும், அறிவின் வேலையான், | |
| கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான், | |
| 'வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும் | |
| எவ்வம் இன்று, அறை பறை எற்றுக!' என்றிட. | |
| | (258-23) |
| | |
1250. | 'வானையும் திசையையும் கடந்த வான் புகழ்க் | |
| கோனை இன்று எதிர்கொள்வான், கோல மா நகர்த் | |
| தானையும் அரசரும் எழுகதான்' எனா, | |
| யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார். | (258-24) |
| | |
1251. | முரசு ஒலி கேட்டலும், முழங்கு மா நகர் | |
| அரசரும் மாந்தரும் அந்தணாளரும் | |
| கரை செயல் அரியது ஓர் உவகை கைதர, | |
| திரை செறி கடல் என, எழுந்து சென்றவால். | (258-25) |