1252. | 'அனகனை எதிர்கொள்க' என்று, அறைந்த பேரி, நல் | |
| கனகம் நல்கூர்ந்தவர் கைப்பட்டென்னவும், | |
| சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய | |
| வனை கடிப் பேரியும், ஒத்த ஆம்அரோ. | (258-26) |
| | |
1253. | அறுபதினாயிரம் அக்குரோணி என்று | |
| இறுதி செய் சேனையும், ஏனை வேந்தரும் | |
| செறி நகர் மாந்தரும், தெரிவைமார்களும் | |
| உறுபொருள் எதிர்ந்தென, உவந்து போயினார். | (258-27) |
| | |
1254. | அன்னையர் மூவரும், அமரர் போற்றிட, | |
| பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின், | |
| தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர, | |
| மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா. | (258-28) |
| | |
1255. | திருவடி இரண்டுமே செம் பொன் மௌலியா, | |
| இரு புறம் சாமரை இரட்ட, ஏழ் கடல் | |
| வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ, | |
| பொரு அரு வெண்குடை நிழற்ற, போயினான். | (258-29) |
| | |
1256. | எல்லவன் மறைந்தனன் - என்னை ஆளுடை | |
| வில்லியை எதிர் கொள, பரதன் மீச் செல்வான், | |
| அல்லி அம் கமலமே அனைய தாள்களில் | |
| கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே. | (258-30) |
| | |
1257. | அவ் வழி மாருதி அம் கை பற்றிய | |
| செவ் வழி உள்ளத்தான், 'திருவின் நாயகன், | |
| எவ் வழி உறைத்தது? அச் செயல் எலாம் விரிந்து, | |
| இவ் வழி எமக்கு நீ இயம்புவாய்' என்றான். | (258-31) |
| | |
1258. | என்றலும், மாருதி வணங்கி, 'எம்பிரான் | |
| மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மா நகர் | |
| நின்றதும், மணவினை நிரப்பி மீண்டு கான் | |
| சென்றதும், நாயினேன் செப்பல் வேண்டுமோ?' | (258-32) |