1259. | ''ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன் | |
| முதலோர்க்கு எல்லாம் | |
| வீடணன் கடன்கள் செய்து மீண்டனன்; அவனுக்கு | |
| இன்னே | |
| சூடுக மௌலி'' என்ன, சந்தர இராமன் தம்பி | |
| மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து | |
| விட்டான். | |
| | (258-33) |
| | |
1260. | தோன்றலும், சுமந்திரன் தொழுத கையினன், | |
| ஈன்று, காத்து, அழித்து, அவை இயற்றும் அவ் உரு | |
| மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல் | |
| சான்றினைப் பரதற்குச் சுட்டி, சாற்றுவான். | (305-1) |
| | |
1261. | அப் பொழுது அவ் வயின் அடைந்துளோர்களைத் | |
| 'தப்பு அறக் காண்பென்' என்று ஐயன் தன் மனத்து | |
| ஒப்பு அற எண்ணும் முன், உம்பர் நாடு வந்து | |
| இப் புறத்து இழிந்தென இழிந்த, மானமும். | (317-1) |
| | |
1262. | அவ் வயின், 'அயோத்தி வைகும் சனமொடும், | |
| அக்குரோணி | |
| தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும், தாயரோடும் | |
| இவ் வயின் அடைந்துளோரைக் காண்பென்' என்று | |
| இராமன் | |
| செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது, | |
| விமானம்தானும். | (317-2) |
| | |
1263. | எவ் வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய | |
| செவ்விய புட்பகம் நிலத்தைச் சேர்தலும் | |
| அவ் அவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும் | |
| எவ்வம் இல் மானம் என்று இசைக்கல் ஆயதால். | |
| | (317-3) |
| | |
1264. | நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின்மலன் | |
| வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர, | |