பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்719

சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன்;

ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி, எய்தினன். 

(329-1)
 
1265.

ஆயிடைக் குகனும் வந்து, ஆங்கு, ஆண்டவன்

அடியில் வீழ,

நாயகன் உவந்து புல்லி, 'நண்ணி, என் பின்பு வந்த

தூயனே! கிளையினோடும் சுகம் இருந்தனையோ?' என்று,

வாயிடை மொழிந்தான், - மற்றை மறைகளும் காணா

அண்ணல்.

(332-1)
 
1266.

வேறு வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி

கூறிய குழுவினோரும் குழுமி, அங்கு இராமன் பாதம்,

ஊறிய உவகை தூண்ட, தொழுதனர், உவந்த பின்பு

தேறிய கமலக்கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான்.

(332-2)
 
1267.

நம்பியும் பாதனோடு நந்தியம்பதியை நண்ணி,

'வெம்பிய எரியின் பாங்கர், விலக்குவென்' என்று

விம்மும்

கொம்பு இயல் மருங்குல் தெய்வக் கோசலை குளிர்

பொன் பாதம்

தம்பியரோடும் தாழ்ந்தான், தாமரைக் கண்ணீர் தாழ.

(332-3)
 
1268.

மூன்று என நின்ற தன்மைக் குணங்களின்

உயிர்கட்கு எல்லாம்

சான்று என நின்ற மானச் சிறுவனைத்

தலைப்பட்டாட்குத்

தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும்

சொல்லற்பாற்றோ?

ஈன்ற போது ஒத்தது அன்றே, எதிர்ந்த போது ஒத்த

தன்மை!

(332-4)
 
1269.

இணை மலர்த் தாளின் வீழ்ந்த இலக்குவன் தன்னை 

ஏந்தி

பணை முலைப் பாலும் கண்ணீர்த் தாரையும் பாய,

நின்றாள்;