பக்கம் எண் :

720யுத்த காண்டம் 

பிணை எனத்தகைய நோக்கின் சீதையை, பேடை

அன்னத்

துணையினை, உலகில் கற்பின் பெருங் கதித்

துறையை, கண்டாள்.

(332-5)
 
1270.

நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி,

விம்மி

பால் முலை சோர நின்ற பல் பெருந் தவத்தினாளை,

கால்முதல் தொழுது, தங்கள் கட்டு இரும் பாவம்

விட்டார்

மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர்

எல்லாம்.

(332-6)
 
1271.

அவ் வயின் விமானம் தாவி, அந்தரத்து, அயோத்தி

நோக்கி,

செவ்வையின் படரல் உற்ற, செகதல மடந்தையோடும்,

இவ் உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு

காண்பான்,

கவ்வையின் ஏகுகின்ற நீர்மையைக் கடுக்கும் அன்றே.

(332-7)
 
1272.

வளம் கெழு கயிலை ஈசன், மலர் அயன், மறைகள்

நான்கும்,

ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு

எட்டா

விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து உயர் வெளிப்

பாழ் மேலாய்,

விளங்குறும் நேமிப் புத்தேள் மேவும் மா அயோத்தி

கண்டார்.

(332-8)
 
1273.

விளங்கிய புட்பகம் நிலத்தின்மீது உற,

தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட,

களங்கனி அனைய அக் கண்ணன் மாதொடும்

விளங்கினன் நகரிடை, விளைவு கூரவே. 

(332-9)