1274. | புகுந்தனர் நகரிடை - பொங்கும் ஓசையின் | |
| மிகுந்துள கவிப் பெருங் கடலும், மேதகு | |
| மகம் பயில் முனிவனும், மற்று உளோர்களும், | |
| அகம்தனில் அருங் களிப்பு எழுந்து துள்ளவே. | (332-10) |
| | |
1275. | நம்பியும் வசிட்டன் கூற, நந்தியம்பதியில் சென்று, | |
| வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, | |
| மாதோடு | |
| இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர் | |
| உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பம் செய்தார். | |
| | (332-11) |
| | |
1276. | உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும் | |
| மயிர் வினை செய்வித்து, ஆங்கே மாசு அற | |
| மண்ணில் தாழும், | |
| செயிர் அறு சடிலக் கற்றைத் திரள் அறக் களைந்து | |
| நீக்கி, | |
| குயில் புரைமொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம் | |
| கொண்டார். | (332-12) |
| | |
38. திருமுடி சூட்டுப் படலம் |
1277. | எழு வகை முனிவரோடும், எண் திசைத் | |
| திசைகாப்பாளர் | |
| குழுவினர், திசைகள்தோறும் குழாம் கொண்டு | |
| களித்துக் கூடி, | |
| தொழுவன அமரர் கைகள் சுமக்கலாம் விசும்பில் | |
| துன்னி, | |
| வழுவல் இல் மலர்கள் சிந்தி, மானிடம் சுருங்கச் | |
| சார்ந்தார். | (6-1) |
| | |
1278. | ஆயது நிகழ, செங் கண் இராமனும் அயோத்தி நண்ணி, | |
| தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் | |
| தாழ்ந்து, | |