பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்721

1274.

புகுந்தனர் நகரிடை - பொங்கும் ஓசையின்

மிகுந்துள கவிப் பெருங் கடலும், மேதகு

மகம் பயில் முனிவனும், மற்று உளோர்களும்,

அகம்தனில் அருங் களிப்பு எழுந்து துள்ளவே. 

(332-10)
 
1275.

நம்பியும் வசிட்டன் கூற, நந்தியம்பதியில் சென்று,

வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி,

மாதோடு

இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர்

உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பம் செய்தார்.

(332-11)
 
1276.

உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும்

மயிர் வினை செய்வித்து, ஆங்கே மாசு அற

மண்ணில் தாழும்,

செயிர் அறு சடிலக் கற்றைத் திரள் அறக் களைந்து

நீக்கி,

குயில் புரைமொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம்

கொண்டார்.

(332-12)
 

38. திருமுடி சூட்டுப் படலம்
 

1277.

எழு வகை முனிவரோடும், எண் திசைத்

திசைகாப்பாளர்

குழுவினர், திசைகள்தோறும் குழாம் கொண்டு

களித்துக் கூடி,

தொழுவன அமரர் கைகள் சுமக்கலாம் விசும்பில்

துன்னி,

வழுவல் இல் மலர்கள் சிந்தி, மானிடம் சுருங்கச்

சார்ந்தார்.

(6-1)
 
1278.

ஆயது நிகழ, செங் கண் இராமனும் அயோத்தி நண்ணி,

தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத்

தாழ்ந்து,