பக்கம் எண் :

722யுத்த காண்டம் 

நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்

சேயொளிக் கமலத்தாளும் திரு நடம் செய்யக்

கண்டான்.

(8-1)
 
1279.

உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன்தானே, 

செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும்,

தம்பியர்தாமும், மற்றும் தாபதர் சங்கத்தோடும்,

அம் புவிதன்னில் மேலாம் அயோத்தியில், அமர்ந்தான்

அம்மா.

(8-2)
 
1280.

இருபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல்

வரிசைக்கு ஏற்ற

திரு ஒத்த சிறப்பர் ஆகி, மானிடச் செவ்வி வீரர்

உருவத் தோள் ஒளிரும் பூணர், உச்சி வெண்

குடையர், பச்சை

மரு ஒத்த அலங்கல் மார்பர், வானரத் தலைவர்

போனார்.

(11-1)
 
1281.

கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம்

அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து

மொய்த்தார்,

குயில் மொழிச் சீதை கொண்கன் நிலமகள்தன்னைக்

கொள்ளும்

இயல்புடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த.

(26-1)
 
1282.

வேறு இனி உரைப்பது என்னோ? வியன் தருக்

குலங்கள் ஆதி,

கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை

காண

தேறு தம் உருவு நீத்து, மானிட உருவில் சேர்ந்து,

ஆங்கு

ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற

அன்றே.

(26-2)