| நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும் | |
| சேயொளிக் கமலத்தாளும் திரு நடம் செய்யக் | |
| கண்டான். | (8-1) |
| | |
1279. | உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன்தானே, | |
| செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும், | |
| தம்பியர்தாமும், மற்றும் தாபதர் சங்கத்தோடும், | |
| அம் புவிதன்னில் மேலாம் அயோத்தியில், அமர்ந்தான் | |
| அம்மா. | (8-2) |
| | |
1280. | இருபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் | |
| வரிசைக்கு ஏற்ற | |
| திரு ஒத்த சிறப்பர் ஆகி, மானிடச் செவ்வி வீரர் | |
| உருவத் தோள் ஒளிரும் பூணர், உச்சி வெண் | |
| குடையர், பச்சை | |
| மரு ஒத்த அலங்கல் மார்பர், வானரத் தலைவர் | |
| போனார். | (11-1) |
| | |
1281. | கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம் | |
| அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து | |
| மொய்த்தார், | |
| குயில் மொழிச் சீதை கொண்கன் நிலமகள்தன்னைக் | |
| கொள்ளும் | |
| இயல்புடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த. | |
| | (26-1) |
| | |
1282. | வேறு இனி உரைப்பது என்னோ? வியன் தருக் | |
| குலங்கள் ஆதி, | |
| கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை | |
| காண | |
| தேறு தம் உருவு நீத்து, மானிட உருவில் சேர்ந்து, | |
| ஆங்கு | |
| ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற | |
| அன்றே. | (26-2) |