1283. | தேவர் கம்மியன்தான் செய்த செழு மணி மாட | |
| கோடி |
யாவரும் புகுந்து மொய்த்தார்; எழுந்த மங்கலத்தின் |
ஓசை |
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள |
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி |
கொண்டார். | (29-1) |
| | |
1284. | அந்தணர், வணிகர், வேளாண் மரபினோர், ஆலி | |
| நாட்டுச் |
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய |
சான்றோர் |
'உய்ந்தனம் அடியம்' என்னும் உவகையின் உவரி |
நாண |
வந்தனர், இராமன் கோயில் மங்கலத்து உரிமை |
மாக்கள். | (32-1) |
| | |
1285. | 'வான் உறு முகுர்த்தம் வந்தது' என்று மா மறைகள் | |
| நான்கும் |
தான் உருக் கொண்டு போற்ற, சலம் தவிர்ந்து |
அமரர் ஏத்தி, |
தேன் உறு மலர்கள் சிந்தி, திசைமுகம் பரவ, தெய்வ |
வான் உறை மகளிர் ஆட, மா தவர் மகிழ்ந்து |
வாழ்த்த. | (37-1) |
| | |
1286. | இப்படித் தழுவி, மாதர் இருவரும், இரண்டு பாலும், | |
| செப்புறல் அரிய இன்பச் செல்வத்துள் செலுத்தும் |
நாளில், |
கப்புடைச் சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன் |
காதல் |
வைப்புடை வளாகம்தன்னில், மன்னுயிர் வாழ்த்த, |
வந்தான். | (41-1) |
| | |
1287. | மறையவர் வாழி! வேத மனுநெறி வாழி! நன்னூல் | |
| முறை செயும் அரக்கர், திங்கள் மும் மழை, வாழி! |
மெய்ம்மை |