பக்கம் எண் :

724யுத்த காண்டம் 

இறையவன் இராமன் வாழி ! இக் கதை கேட்போர் வாழி !

அறை புகழ்ச் சடையன் வாழி ! அரும் புகழ் அனுமன்

வாழி !

(42-1)
 

39. விடை கொடுத்த படலம்

 
1288.

கெவனோடு கெவாக்கன், தூம்பன், கேசரி,

கெந்தமாதன்

தவன் உறு சரபன், சாம்பன், சுடேணன், சம்பாதி,

நீலன்,

நவை அறு பனசன், தாரன், கெசன், நளன், சுமீரன்

நண்பாம்

இவன் அரிலோமன், மின்போல் எயிற்றினன், இடபன்

என்பான்.

(7-1)
 
1289.

விரதன், வீமாக்கன், வேகதரிசியே, விந்தன், வெற்றிக்

கரமுடைச் சதுக்கன், சோதிமுகன், தெதிமுகன்,

கயந்தன்

அரன், விறல் கொடிய கோபன், இடும்பனோடு

அரம்பன், ஆண்மை

தெரிதரு வசந்தன், கொற்றத் துன்முகன், தீர்க்க 

பாதன்.

(7-2)

 

1290.

வான் வளம் சுரக்க; நீதி மனு நெறி முறையே

என்றும்

தான் வளர்த்திடுக; நல்லோர்தம் கிளை தழைத்து

வாழ்க;

தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன்

செய்கை

யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க,

எங்கும்.

(37-1)
 
1291.

எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு

எல்லாம்

முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம்

சொல்,