பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்73

எரிக்கும்  இயல்புடைய  நெருப்புக்கு  நெருப்புப்  போன்ற
சினமுடையவர்களாய்;  புறத்தும்  பொங்கிய பங்கியர் -
(அகத்தில் உள்ள சின நெருப்புக்கு அடையாளமாய்) வெளியே
விரிந்து தோன்றும் செம்முடியுடையவராய்; காலனும் புகழ்வார்
- (கொல்லுதலில்) யமனாலும் புகழப்படுவோராய் விளங்கினர்.
 

அரக்கரை  மணவாளப்  பிள்ளைகளாகக்  கூறியதற்கு ஒப்ப,
'மறத்தைப் பூண்டு' என்ற தொடருக்கு மறத்தையே அழகு செய்யும்
அணிகளாகப் பூண்டு எனவும் பொருள் கொள்ளலாம். இப்பாடலில்
வரும் வருணனை படிமக் (இமேஜரி) களஞ்சியமாக உள்ளது. 
 

(6)
 

9305. 

நீண்ட தாள்களால் வேலையைப் புறம் செல நீக்கி, 

வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி 

தூண்டு வான் உரும் ஏற்றினைச் செவிதொறும்  

தூக்கி,

மூண்ட வான் மழை உரித்து உடுத்து, உலாவரும் 

மூர்க்கர்;

 

நீண்ட தாள்களால் வேலையைப் புறம் செல நீக்கி
தங்கள் நீண்ட கால்களால் கடல் நீரை அப்பாற் செல்லும்படி
போக்கி; வேண்டும் மீனொடு மகரங்கள் - வேண்டிய அளவு
மீன்களோடு மகரப்பெரு மீன்களையும்; வாயிட்டு விழுங்கி -
வாயில் போட்டு விழுங்கி; தூண்டுவான் உரும் ஏற்றினை -
(மேகங்களால்) உண்டாக்கப்படுகின்ற பேரிடிகளை; செவிதொறும் 
தூக்கி
-   காதுகளிலெல்லாம்   தொங்க   விட்டுக்கொண்டு; 
மூண்டவான்   மழை
-   திரண்டெழுந்து   வருகின்ற பெரிய 
மேகங்களை;   உரித்து   உடுத்து  -  பிய்த்து  ஆடையாக
உடுத்துக்கொண்டு; உலா வரும் மூர்க்கர்- எங்கணும் உலவி
வருவர் அந்த முருடர்கள். 
 

(7)
 

9306.

மால் வரைக் குலம் பரல் என, மழைக் குலம்

சிலம்பா

கால் வரைப் பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைங் 

கழலார்;

மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் 

விசையோர்;

நால் வரைக் கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன 

நடையார்;