பக்கம் எண் :

74யுத்த காண்டம் 

மால்வரைக் குலம் பரல் என- பெரிய மலைக் கூட்டங்களே
உட்பரலாக அமைய; மழைக்குலம் சிலம்பா- மேகக் கூட்டங்களே
காலில்   அணியும்   சிலம்புகளாக;   கால்   வரை- கால்களாகிய
பெருமலைகளில்; பெரும்பாம்பு கொண்டு அசைத்த பைங்கழலார்-
பெரிய பாம்பு கொண்டு கட்டிய பசும் பொன் கழல் அணிந்தவர்கள் 
(அவ் அரக்கர்கள்); மேல்வரைப் படர் கலுழன் - விண்ணக எல்லை 
வரை  பறந்து  செல்லும் கருடனால் எழுப்பப்படுகின்ற; வன் காற்று 
எனும்   விசையோர் -
   வலிய   காற்றுப்   போன்ற வேகத்தை 
உடையவர்கள்;நால் வரைக் கொணர்ந்து - தொங்கி அசைகின்ற 
(துதிக்கை  கொண்ட)  மலையனைய  யானைகளைக் கொண்டுவந்து; 
உடன்   பிணித்தால்   அன்ன  நடையார்
- ஒன்றாகக் கட்டியது 
போன்ற நடையை உடையவர்கள்.
  

நால்வரை கொணர்ந்து எனற்பாலது நால்வரைக் கொணர்ந்து என
வந்தமை முந்தைய வரிகளில் அமைந்த ஓசையைப் பேணும் நயத்திற்காக.
 

(8)
 

9307.

உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின், உடனே 

மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார்; 

தண்ணின் நீர் முறை தப்பிடின், தடக் கையால் தடவி, 

விண்ணின் மேகத்தை வாரி, வாய்ப் பிழிந்திடும் 

விடாயர்;

 

உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின்- உண்ணுதற்கு 
உரிய தசைகள் உரிய நேரத்தில் கிடைக்காமல் போனால்; உடனே
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார்
- மண்
மீது நிற்கின்ற பெரிய யானைகளை உடனே வாய்க்குள் போட்டுக் 
கொள்கின்ற பசியை உடையவர்கள் (அந்த அரக்கர்கள்); தண் இன் 
நீர் முறை தப்பிடின்
- குளிர்ந்த இனிய நீர் குடிப்பதற்கு உரிய 
நேரத்தில் கிடைக்காமல் தடைப்பட்டால்; தடக் கையால் தடவி 
- பெரிய கைகளால் ஆகாயத்தைத் தடவி; விண்ணின் மேகத்தை 
வாரி
- அவ் ஆகாயத்திலே படர்கின்ற மேகத் திரள்களை அள்ளி; 
வாய்ப் பிழிந்திடும் விடாயர் - தங்கள் வாயிலே பிழிந்திடுகின்ற
நீர் வேட்கை உடையவர்கள் அவர்கள். 
 

(9)
 

9308.

உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ 

எறிந்து, வேல் நிலை காண்பவர், இந்துவால் யாக்கை