பக்கம் எண் :

760யுத்த காண்டம் 

இயல்பினனாய் வாமன உருவில் வந்து தன் காலால் மூன்று அடி
மண்ணை   யாசித்தார். கொடுத்தான்.     ஆனால் அவரோ    தன்
பேருருவால் உலகனைத்தையும்   ஈரடியால் அளந்து,    மூன்றாவது
அடியை அவன்    தலையில்  வைத்து அருள்பாலித்தார். அவ்வாறு
அளந்த   நாளில்  பிரம்மா   அவர்தம்   திருப்பாதங்களைத்   தம்
குண்டிகையில்   இருந்த   நீரால் கழுவி மந்திரத்தால் வாழ்த்தினார்.
அவ்வாறு கழுவிய நீர் கங்கையாகப் பெருக அதனைச் சிவபெருமான்
தலையால் தாங்கினார் என்பது வரலாறு.
  

20. கங்கையை அவனியில் கொணர்ந்தோர் - 

பகீரதன் (1586, 3923)
 

சூரிய   குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன்
பகீரதன்.  தன்   மூதாதையர்கள் சாபத்தால்   இறந்த செய்தியை
வசிட்டர்  வாயிலாகக் கேட்டு,   அவர்கள்   நற்கதி   அடையப்
பிரம்மனை   நோக்கி   10,000 ஆண்டுகள்   தவம்   புரிந்தான்.
பிரம்மனோ ''நீ   கங்கையையும்   சிவனையும் நோக்கித்   தவம்
செய்து கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால்
அவர்களுக்கு   நற்கதி   கிடைக்கும்'' என்று  கூற   அவ்வாறே
செய்தான்.   கங்கை சிவன்   முன் தோன்றி, ''நான் வருவதற்குத்
தடையொன்றும் இல்லை,   என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார்
உண்டாயின்''   என்றாள். பிரம்மன்   கட்டளைப்படி  சிவனாரை
நோக்கித்   தவம் புரிந்தான். சிவனாரும் கங்கையின் வேகத்தைத்
தாங்கிக்   கொள்வதாகக்  கூற, பின் சிவன் வேண்டுகோளின்படி
கங்கை வானுலகினின்று பூலோகம் வருகையில் சிவனாரால் கங்கை
தாங்கப்   பெற்றுப்   பூமி   பொறுக்கும்   அளவுக்குப் பூமியில்
விடப்பட்டாள். கங்கையை  இறந்தோர் சாம்பலில்   பாய வைத்து
நற்கதி பெறச் செய்தவன். இவனால் கங்கை கௌரவம் பெற்றதால்
கங்கைக்குப் பாகீரதி எனப் பெயர் வந்தது.
 

21. பரசுராமன் கதை (1630, 7415)
 

சமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகை. இவள் நீராடிப் புனல்
கொணர கங்கை சென்றதொரு நாளில், அங்குச் சித்திராங்கதன் என்ற
கந்தருவனைக்   கண்டாள். அந்த   அழகன்  அழகிய   கந்தர்வப்
பெண்களோடு  புனல்  விளையாடிக்  கொண்டிருந்தான். அவர்களை
அந்நிலையில் கண்டு அவர்களின் அழகில் மயங்கி நின்றாள். காலம்
கடந்த நிலையில் அச்சத்தோடு