பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்77

பெற்ற உயிர்கள் எத்தனையோ அத்தனை காலாட்படை வீரர்கள்
(என்று அளவிறந்தன அரக்கரின் நால்வகைப் படைகள்)
 

உயிர்கள்  அனுபவிப்பதற்கென  இறைவனால்  எத்தனையோ 
பல போகங்கள் படைக்கப்பட்டுள்ளனவோ அத்தனை புரவிகளின்
கூட்டம்  எனவும் மூன்றாவது  வரிக்குப் பொருள் கொள்ளலாம்.
'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா எங்கள் இறைவா'
எனச் சுப்பிரமணிய பாரதியார் பாடியது இங்கு நினைவுகூரத் தக்கது. 
 

(13)
 

9312.

இன்ன தன்மைய யானை, தேர், இவுளி என்று 

இவற்றின்

பன்னு பல்லணம், பருமம், மற்று உறுப்பொடு பலவும், 

பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது 

புனைந்த

சின்னம் உள்ளன இல்லன, மெய்ம் முற்றும் 

தெரிந்தால்.

 

இன்ன தன்மைய - இத்தன்மைகளைக் கொண்ட; யானை தேர்
இவுளி என்று இவற்றின்
- யானை, தேர், குதிரை ஆகிய இவற்றின்; 
மெய்  முற்றும்  தெரிந்தால் -  உடல்  முழுவதையும் ஆராய்ந்து 
பார்த்தால்;    பன்னு    பல்லணம்    பருமம் -  சிறப்பித்துச்  
சொல்லப்படுகின்ற (குதிரை மீது உள்ள) தவிசும், (யானை மேல் இடும் 
ஆசனமாகிய) இருக்கையும்; மற்று உறுப்பொடு பலவும் - மற்றும் உள்ள 
பலவேறு  உறுப்புகளும்;  பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு
அல்லது 
- பொன்னும்  நல்ல  பெரிய  மணிகளும்  கொண்டல்லது; 
புனைந்த சின்னம்  உள்ளன இல்லன - வேறு செய்த அடையாளக் 
குறிகள் கொண்டவை இல்லையாம். 
 

(14)
 

9313.

இப் பெரும் படை எழுந்து இரைத்து ஏக, மேல் 

எழுந்த

துப்பு உதிர்ந்தன தூளியின் படலம் மீத் தூர்ப்ப, 

தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது; கரி மதம் தழுவ, 

உப்பு நீங்கியது, ஓங்கு நீர் வீங்கு அலை உவரி. 

 

இப் பெரும் படை எழுந்து இரைத்து ஏக - அரக்கரின் 
இந்தப் பெரிய படை போர்க்களம் நோக்கிப் புறப்பட்டு ஆரவாரம்
செய்து   போகும்போது;  ஓங்கு நீர் வீங்கு அலை உவரி-
பெருகிவரும் நீர் கொண்டதும் பொங்கும் அலைகள்