கெட்ட தூதர் கிளத்தினவாறு - கொடிய தூதர்கள் கூறியவாறு; ஒரு கட்ட மானிடன் கொல்ல - ஒரு வருந்துந் தன்மையை உடைய மனிதன் கொல்ல; என் காதலன் பட்டு ஒழிந்தனனே' எனும் - என் அன்புக்குரிய மகன் இறந்து பட்டனனே!' என்பான்; பல்முறை விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால் - பலமுறை 'மகனே! மகனே!' என்று குரல் விட்டு அழைப்பான்; (அவன் வாராமையால்) வருந்துவான்; பின் மனம் வெதும்புவான். |
(14) |
9200. | எழும்; இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று |
| அழும்; அரற்றும்; அயர்க்கும்; வியர்க்கும், போய் |
| விழும்; விழிக்கும்; முகிழ்க்கும்; தன் மேனியால், |
| உழும் நிலத்தை; உருளும்; புரளுமால். |
|
எழும்; இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று அழும்- (துன்ப மிகுதியால் இராவணன்) எழுவான். பிறகு தரையில் இருப்பான்; பெருமூச்சு விடுவான், இரக்கமிக்கு அழுவான்; அரற்றும்; அயர்க்கும்; வியர்க்கும்; போய் விழும்- வாய் திறந்து அரற்றுவான்; சோர்வுறுவான்; வியர்ப்பான்; சிறிது நடந்து விழுவான்; விழிக்கும்; முகிழ்க்கும்; தன் மேனியால் நிலத்தை உழும்; உருளும்; புரளுமால் - (பேதலித்து ஒன்றும் தோன்றாமல்) கண்களை விழிப்பான்; பின்பு மூடுவான், தன் உடம்பினால் நிலத்தை உழுவான்; பின்பு தரையில் உருண்டு செல்வான், மீண்டும் புரண்டு வருவான். |
இரைத்தல் - பெருமூச்சு விடுதல், அயர்த்தல் - சோர்தல், முகிழ்த்தல் - கண்களை மூடுதல், கலப்பையால் நிலத்தை உழுவது போலத் துன்ப மிகுதியால் இராவணன் தன் உடம்பால் நிலத்தை உழுவான் போல் இயங்கித் துன்புற்றான். |
(15) |
9201. | 'அய்யனே!' எனும், ஓர் தலை; 'யான் இனம் |
| செய்வெனே அரசு!' என்னும், அங்கு ஓர் தலை; |
| 'கய்யனேன், உனைக் காட்டிக் கொடுத்த நான், |
| உய்வெனே!' என்று உரைக்கும், அங்கு ஓர் தலை. |
|
ஓர் தலை, 'அய்யனே!' எனும் - (இராவணனுடைய பத்துத் தலைகளுள்) ஒருதலை 'அய்யனே!' என்று அழைக்கும்; ஆங்கு ஓர் தலை 'யான் இனம் அரசு செய்வனே!' என்னும்- மற்றொரு தலை 'யான் இன்னும் அரசு செய்வேனோ!' என்றும் சொல்லும்; 'உனைக் |