பொருளில் விகுதி. அஃதாவது விகுதிக்கெனத் தனிப்பொருள் இல்லை. இப்படியே பரியது, கலிப்பது, சுறவது என்பனவும் பகுதிப் பொருள் விகுதி கொண்டவை. |
(20) |
| 9319. | தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்தம் |
| தானை |
| பசும் புல் தண் தலம் மிதித்தலின், கரி படு மதத்தின் |
| அசம்பின் சேறு பட்டு, அளறு பட்டு, அமிழுமால், |
| அடங்க; |
| விசும்பின் சேறலின் கிடந்தது, அவ் விலங்கல்மேல் |
| இலங்கை. |
| |
தசும்பின் பொங்கிய- குடம் போல ஓங்கிய; திரள் புயத்து அரக்கர் தம் தானை- திரண்ட தோள்களையுடைய அரக்கரின் சேனை; பசும்புல் தண் தளம் மிதித்தலின் - பச்சைப் புல்லால் குளிர்ந்துள்ள தரையை மிதித்துப் போவதாலும்; கரிபடு மதத்தின் - யானைகளிலிருந்து பொழியும் மதநீர்ப் பெருக்கத்தாலும்; அசும்பின் சேறுபட்டு- வழுக்கு நிலத்துச் சேறுபோல; அளறுபட்டு - நெகிழும் சேறு உண்டாவதால்; அடங்க அமிழும் - எல்லாம் புதைபட்டுவிடும்; (ஆனால்) விசும்பின் சேறலின்- (சேற்றில் அமிழ்வதற்குத் தப்பி) யாவரும் விண்வழியே சென்றதால்; அவ் விலங்கல் மேல் இலங்கை- அந்தத் திரிகோண மலை மேல் இருந்த இலங்கை; கிடந்தது- (அமிழாமல்) இருந்தது. |
ஆல் - அசை. |
(21) |
சிவபிரானிடம் முறையிடுதல் |
| 9320. | படியைப் பார்த்தனர்; பரவையைப் பார்த்தனர்; படர் |
| வான் |
| முடியைப் பார்த்தனர்; பார்த்தனர், நெடுந் திசை |
| முழுதும்; |
| வெடியப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர்; |
| மிடைந்த |
| கொடியைப் பார்த்தனர்; வேர்த்தனர், வானவர் |
| குலைந்தார். |