பக்கம் எண் :

82யுத்த காண்டம் 

வானவர்- தேவர்கள்; படியைப் பார்த்தனர்- நிலவுலகத்தைப் 
பார்த்தார்கள்;   பரவையைப்   பார்த்தனர  -   கடலிடத்தைப் 
பார்த்தார்கள்; படர்  வான்  முடியைப் பார்த்தனர் -  எங்கெங்கும்  
பரவியுள்ள  ஆகாயத்தின் உச்சியைப் பார்த்தார்கள்; நெடும்  திசை
முழுதும் பார்த்தனர்
- நீண்ட திசைகள் முழுவதையும் பார்த்தார்கள்;
வெடியப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர்- (அரக்கர் சேனை 
இல்லா இடம்) ஒழிந்ததால் பார்ப்பதற்கு ஒரே ஒரு வெற்றிடத்தைக்கூட  
அவர்கள்   காணவில்லை;   மிடைந்த   கொடியைப் பார்த்தனர்
நெருங்கிச்   செறிந்த   கொடிகளைப்   பார்த்தார்கள்; வேர்த்தனர் 
குலைந்தார்
- அச்சத்தால் உடல் வேர்த்தவராய் மனம் குலைந்தார்கள். 
 

(22)
 

9321.

உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா, 

அலகு இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ? 

அன்றேல்

விலகு நீர்த் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் 

அலகு இல் பல் உருப் படைத்தனவோ?' என 

அயிர்த்தார்.

 

உலகில்  நாம்  அலா  உரு எலாம்- உலகத்தில் நம்மைத் 
தவிர உள்ள எல்லா உருவங்களும்; இராக்கத உருவா- அரக்கர்
உருவாகி;  அலகு  இல்பல் படை பிடித்து - அளவில்லாத பல 
வகைப் போர்க்கருவிகளை ஏந்தி; அமர்க்கு எழுந்தவோ- போர்
செய்வதற்குப்  புறப்பட்டு  வந்தனவோ?  அன்றேல் - அவ்வாறு
இல்லையென்றால்; விலகு நீர்த்திரை- விலகிச் செல்லுகின்ற நீர் 
அலைகளையுடைய; வேலை ஓர் ஏழும் போய் - ஏழு கடல்களும் 
சென்று;   விதியால்  -  முறைப்படி;   அலகுஇல்  பல்  உருப் 
படைத்தனவோ  
-   அளவில்லாத    பல    வடிவங்களை 
உண்டாக்கினவோ?  என அயிர்த்தார் - என்று ஐயப்பட்டனர். 
 

(23)
 

9322.

நடுங்கி, நஞ்சு அடை கண்டனை, வானவர், 'நம்ப! 

ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம்; உயிரைப் 

பிடுங்கி உண்குவர்; யார் இவர் பெருமை பண்டு 

அறிந்தார்?

முடிந்தது, எம் வலி? என்றனர், ஓடுவான் முயல்வார்.