பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்83

வானவர்-  தேவர்கள்;  நடுங்கி- (அச்சத்தால்) நடுங்கி,
ஓடுவான் முயல்வார் - ஓடத் தொடங்கியவர்கள்; நஞ்சு அடை
கண்டனை
- நஞ்சு தங்கிய கழுத்துடைய சிவபிரானை (அடைந்து)
நம்ப - (எம்) தலைவனே; யாம் கரந்து ஒடுங்கி உறைவிடம்
அறிகிலம்
- நாங்கள் (இந்த அரக்கரிடமிருந்து தப்பி) மறைந்து 
ஒடுங்கி   வாழ்வதற்கு  ஏற்ற இடத்தை அறிகிலேம்; உயிரைப் 
பிடுங்கி   உண்குவர்
  -   நாங்கள்   மறைந்து   ஒடுங்கி
விடவில்லையென்றால் எம் உயிரைப் பறித்து உண்டுவிடுவார்கள்; 
இவர் பெருமை- இவ் அரக்கர்களின் பெருமையை; பண்டு 
அறிந்தார்  யார்
-  முன்பு  தெரிந்தவர்கள் யார்?  (எவரும் 
இல்லை);   முடிந்தது   எம்  வலி  என்றனர்- எங்கள் 
வலிமையெல்லாம் அழிந்தது என்றனர். 
 

(24)
 

9323.

'ஒருவரைக் கொல்ல, ஆயிரம் இராமர் வந்து, 

ஒருங்கே

இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால், 

என் ஆம்?

நிருதரைக் கொல்வது, இடம் பெற்று ஓர் இடையில் 

நின்று அன்றோ?

பொருவது, இப் படை கண்டு, தம் உயிர் பொறுத்து 

அன்றோ?'

 

ஒருவரைக் கொல்ல- இந்த அரக்கருள் ஒருவனைக் கொல்ல
வேண்டுமென்றாலும்; ஆயிரம் இராமர் ஒருங்கே வந்து- ஆயிரம்
இராமர்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து; இரு பதிற்றிரண்டு ஆண்டு 
- இருபத்து நான்கு ஆண்டுக்காலம்; நின்று அமர் செய்தால் என் 
ஆம்
- புறமுதுகு இட்டு ஓடாமல் உறுதியாக நிலைத்து நின்று போர் 
செய்தாலும்  என்ன  விளைவு ஆகப்போகிறது? (ஒன்றும் செய்துவிட 
முடியாது); நிருதரைக் கொல்வது- அரக்கர்களைக் கொல்வதென்பது; 
இடம்  பெற்று  ஓர்  இடையில் நின்று அன்றோ - நிற்பதற்குப்
போர்க்களத்தில் இடம் பெற்று, அந்த ஓரிடத்தில் உறுதியாக நின்றபிறகு 
அன்றோ? (நிற்பதற்கு இடம் கிடைக்கவும் போவதில்லை; ஓர் இடத்தில் 
நின்று போர் செய்ய முடியப்போவதும் இல்லை என்பதாம்.) பொருவது 
- போர் செய்வதென்பது; இப்படை கண்டு- இந்தப் படையைக் கண்ட
பிறகும்;   தம்  உயிர்   பொறுத்து அன்றோ?- தங்கள் உயிரைத்
தாங்கி நிற்கும் சாகசம் பெற்றால் அன்றோ?