|
கோவேந்தன் தேவி கொடுவினை
யாட்டியேன்
யாவுந் தெரியா இயல்பினே னாயினும்
முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே |
|
கோ
வேந்தன் தேவி - பேரரசனாய பாண்டியன் பெருந் தேவியே, கொடுவினையாட்டியேன் யாவும் தெரியா
இயல்பி னேன் ஆயினும் - கணவனை இழந்த தீவினையுடையேனாகிய யான் ஒன்றுமறியாத தன்மையேன்
ஆயினும், முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய காண்
- பிறனுக்கு முற்பகலில் கேடு செய்தானொருவன் தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காணலுறுந்
தன்மையையுடையன வினைகள் ;
கோ வேந்தன் - மன்னர் மன்னன் என்றுமாம்
; 1"மன்னவர் மன்னன் மதிக்குடை வாழ்வேந்தன்
தென்னவன்" என்றார் முன்னும். கோவேந்தன் தேவி: விளி. பிறனுக்குக் கேடு செய்தானொருவனுக்குச்
செய்த அன்றே கேடு எய்தும் என்பது தோன்ற, முற்பகல் கேடு செய்தான் பிற்பகல் கேடு காண்குறூஉம்
என்றாள் ; முற்பகல் பிற்பகல் என்பன ஒரு பகலின் முற்கூறும் பிற்கூறுமாம். 2"பிறர்க்கின்னா
முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும்" என்றார் வள்ளுவரும். பிறன்கேடு
- பிறனுக்குக் கேடு ; நான்கனுருபு தொக்கது. தன்கேடு என்பதற்குத் தான் பிறனுக்குச் செந்த
அக்கேடு என்று பொருள் கூறி, அதுவே தனக்கு வருதலைக் காண்பான் என்றுரைத்தலுமாம். பெற்றிய
என்பதற்கு வினைகள் என எழுவாய் வருவிக்க, காண், அசை.
இனி, கண்ணகி தான் பிறந்த பதிப்பெருமை
கூறுகின்றாள் :
|
1
சிலப். 16: 19--20. 2 குறள்.
319.
|
|
|