அரசர் தம் பெருமகன்-மன்னர் மன்னனாகிய தயரதன்; அகிலம் யாவையும் விரசுறு - உலகம் முழுதும் தன் நிழலில் வந்து சேர்வதாகிய; தனிக்குடை விளங்க - ஒப்பற்ற வெண்கொற்றக் குடை விளங்கவும்; வெற்றி சேர் முரசு ஒலிகறங்கிட-வெற்றி மிகுந்த முரசின் ஒலி திரிந்து ஒலிக்கவும்; முனிவர் ஏத்துற -முனிவர்கள் எல்லாம் புகழவும்; கரைசெயல் அரியது - அளவிடற்கு அரிதாகிய; ஓர் களிப்பில் வைகும் நாள் - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவனாக வாழ்ந்திருந்த காலத்திலே. இந்தப் பாட்டு சில பிரதிகளில் திரு அவதாரப் படலத்தின் இறுதிப் பாடலாக அமைந்துள்ளது. கையடைப் படலத்தின் தோற்றுவாயாகக் கூறப்படுவதாகும். அரசர்தம் பெருமகன்: சக்கரவர்த்தி. ‘அகிலம்’ பரந்த என்னும் பொருளில் உலகைக் குறித்து நின்றது. சேர்தல். கரை. வரம்பு (அளவு) கரை என்னும் குறிப்பால் ‘களிப்பு’ கடல் என்னும் பொருளை ஏற்றது. ‘நாள்’ காலத்தை உணர்த்தும். ‘எய்தினான்’ என்ற அடுத்த பாட்டோடு முடியும். மகிழ்ச்சியுடன் தயரதன் வாழ்தலைக் கூறியதாகும். 1 |