கரும்பு கால்பொர- கரும்புச் சோலையிலே காற்று வீசுவதால்; கமுகு வார்ந்த தேன் - கமுகு மரங்களிலே பெருகிவரும் தேன்; வரம்புமீறிடும் - வரப்பை மீறிச் செல்லும்படியான; மருதவேலிவாய் - மருத நிலங்களிலே; அரும்பு கொங்கையார் - தோன்றிவரும் தனங்களையுடைய இளமாதரது; அம்மென் ஒதிபோல் - அழகிய. மென்மையான கூந்தலைப் போலக் கறுத்த; சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார் - வண்டுகள் வாழ்கின்ற ஒரு சோலையை அம்மூவரும் அடைந்தனர். கால்: காற்று. பொருதல்: வீசுதல். வார்ந்த: பெருகிய. வரம்பு: வரப்பு. மருதவேலி: மருதநிலம். அரும்புதல்: தோன்றுதல். அரும்பு கொங்கை’ வினைத்தொகையாம். ஓதி: கூந்தல். வண்டின் கரு நிறத்துக்கு உவமையாகக் கூறப்பட்டது. 23 |