வீர! மேவினம் பிரிதல் ஆற்றேம் - வீரனே! நாங்கள் வந்து உன்னை அடைந்தோம். பிரிதல் செய்யோம்; நீ விதியின் எம்மை ஏவின செய்து - நீ முறைப்படி எங்களை ஏவிட்ட காரியத்தைச் செய்து; இளையவன் போல நிற்றும் என்று - இளையவனாகிய இலக்குவனைப்போலப் பணிபுரிந்து நிற்போம் என்று படைக்கலத் தேவதைகள் கூற; அவனும் செவ்விது என்று நேர - இராமபிரானும் நல்லது. என்று ஒப்புக்கொள்ள; பூவை போல் நிறத்தினாற்கு - காயாம்பூவைப் போன்ற நிறம் கொண்ட இராமபிரானுக்கு; புறத்தொழில் புரிந்த - ஏவல் தொழிலைச் செய்திருந்தன. மேவினம். ஆற்றேம் என்பன தன்மைப் பன்மை வினைமுற்றுகள். பிரிதல்: தொழிற்பெயர். விதியின் முறைப்படி. நிற்றும்: செவ்விது: அழகிது. நேர: ஒப்ப. பூவை: காயாம்பூ. புறத்தொழில்: ஏவல் தொழில். தெய்வப்படைக் கலங்களுக்குரிய தேவதைகள் இராமனை நோக்கி ‘’வீரனே! நாங்கள் உன்னை அடைந்தோம். இனிப்பிரிய மாட்டோம். நீ ஏவிய பணியைச் செய்து இலக்குவனைப் போல. நிற்போம் என். இராமனும் அழகிது என்று ஒப்புக் கொள்ள - அப்படைக்கலத் தேவதைகள் இராமனுக்கு ஏவல்தொழிலைச் செய்திருந்தன என்பது பொருள். 3 |