விராதன் எதிர்ப்படுதல் 2521. | எட்டொடு எட்டு மத மா கரி, இரட்டி அரிமா, வட்ட வெங் கண் வரை ஆளி பதினாறு, வகையின் கிட்ட இட்டு இடை கிடந்தன செறிந்தது ஒருகைத் தொட்ட முத் தலை அயில் தொகை, மிடல் கழுவொடே. |
எட்டொடு எட்டு - பதினாறு; மதமாகரி - மதங்கொண்ட பெரிய யானைகள்; இரட்டி அரிமா - அவற்றிற்கு இருமடங்காம் முப்பத்திரண்டு சிங்கங்கள்; வட்டவெங்கண் -வட்டமான கொடிய கண்களையுடைய; வரை ஆளி பதினாறு - மலையில் வாழும் பதினாறு யாளிகள்;வகையின் - தன் வகைமையால்; கிட்ட இட்டு - நெருங்கக் கோத்திட்டு; இடைகிடந்தன - இடையே நெருங்கிக் கிடந்தனவாக; செறிந்தது ஒருகைத் தொட்ட - திரண்டதான தன் ஒரு கையால் பிடித்த; முத்தலை அயில் தொகை - மூன்று தலைகளையுடையமிக்க கூர்மையுடன் கூடிய; மிடல் கழுவொடு - வலிமைமிக்க சூலாயுதத்துடன், ஏ -அசை. விராதன் உண்ண யானை முதலியவற்றைத் தன் சூலத்திற் கோத்து எளிதிற் பிடித்திருந்தான்.எட்டொடு எட்டு என்பதை அறுபத்து நான்கு என்பர் சிலர். தொட்ட - பெரிய எனும் பொருள் தரும்திசைச் சொல்லுமாம், ஆளி என்பது உறுப்புகளால் யானையும் சிங்கமும் சேர்ந்து சிறகும் கொண்டு காணப் பெறும் விலங்கு. 5 2522. | செஞ் சுடர்ச் செறி மயிர்ச் சுருள் செறிந்த செனியன், நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்த தென, மா மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில் பஞ்சு பட்டது பட, படியின் மேல் முடுகியே. |
செஞ்சுடர் - சிவந்த ஒளியுடைய; செறிமயிர்ச் சுருள் செறிந்த - அடர்ந்தசுருட்டை மயிர்கள் கொண்ட; செ(ன்)னியன் - தலையுடையனாகி; நஞ்சு வெற்பு உருவுபெற்று - நஞ்சு, மலையின் வடிவைக் கொண்டு; இடை நடந்தது என - அவ்வனத்திடைநடந்தது போல; மாமஞ்சு சுற்றிய வயங்குகிரி - பெரிய மேகம் சூழ்ந்து விளங்கும்மலைகள், (கால்களின் |