7. வாலி வதைப் படலம் இராமன் கிட்கிந்தையின் மன்னனான வாலியைக் கொன்ற நிகழ்ச்சியைக் கூறும் பகுதியாகும். இராமன், இலக்குவன், சுக்கிரீவன், அனுமன் ஆகிய நால்வரும் பிற வானர வீரர்களோடு கிட்கிந்தையை அடைந்து, வாலியைக் கொல்லுதற்குரிய வழியை ஆராய்ந்தனர். போர் நடக்கையில் தான் வேறுபுறம் நின்று வாலி மீது அம்பு தொடுப்பதாக இராமன் கூற, சுக்கிரீவன் அதை ஏற்றுக்கொண்டு, வாலியை வலியப் போருக்கழைத்தான். வாலியும் போருக்குப் புறப்படத் தாரை இராமன் துணையொடு சுக்கிரீவன் போரிட வந்துள்ளமையைச் சுட்டிப் போருக்குச் செல்வதைத் தடுத்தாள். வாலி, இராமனது அறபபண்புகளைத் தாரைக்கு உணர்த்திவிட்டுப் போரை விரும்பிக் குன்றின் புறத்தே வந்தான். பேராற்றல் படைத்த வாலி சுக்கிரீவர்களை இராமன் வியந்து பேச, இலக்குவன் சுக்கிரீவனை ஐயுற்றுப் பேசினான். நட்புக் கொள்வாரிடம் உள்ள நற்குணங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டுமென இராமன் இலக்குவனுக்கு மறுமொழி உரைத்தான். வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் இடையே போர் கடுமையாக நடந்தது. வாலி, சுக்கிரீவனை யானையைச் சிங்கம் அழிப்பது போல அவன் வலிமை தளர்ந விழும்படி செய்ய, சுக்கிரீவன் இராமனை அடைந்து உதவி வேண்டினான். இராமன் சுக்கிரீவனைக் கொடிப் பூ அணிந்து, போர் புரியச் சொல்ல, அவ்வாறே சென்று சுக்கிரீவன் வாலியோடு மோதினான். வாலி சுக்கிரீவனை மேலே தூக்கிக் கீழே எறிந்து கொல்ல முயன்றபோது, இராமன் வாலியின் மார்பில் அம்பினைச் செலுத்த வாலி மண்ணில் சாய்ந்தான். தன்மீது அன்பு செலுத்தியவன் யார் என அறிய, வாலி அம்பைப் பறிக்க, அதனால் குருதி வெள்ளம் பெருக, அதைக் கண்டு உடன்பிறந்த பாசத்தால் சுக்கிரீவன் கண்களில் நீர்மல்க நிலமிசை வீழ்ந்தான். வாலி தன் மார்பில் தைத்த அம்பில் 'இராமன்' என்னும் நாமத்தைக் கண்டான். இராமன் அறமற்ற செயலைச் செய்துவிட்டதாக இராமனைப் பலவாறு இகழ்ந்த்ான். இராமன் தான் செய்தது முறையான செயலே எனத் தெளிவுபடுத்தினான்; வாலி தன்னை விளங்கெனக் கூறிக்கொள்ளம் முகத்தான் தன்பால் சிறிதும் குற்றம் இல்லை என உணர்த்த, உருவத்தால் விலங்காயினும் நல்லறிவு பெற்ற வாலி செய்த செயல் குற்றமுடைத்து என இராமன் விளக்கினான். அதனைக் கேட்ட வாலி, தகாத வகையில் மறைந்து நின்று எய்யக் காரணம் யாது என வினவ, அதற்கு இலக்குவன் விடையளித்தான். இராமனைச் சுக்கிரீவன் முதலில் சரணடைந்துவிட்டதால், அவனைக் காக்க வேண்டி இராமன் இவ்வாறு செய்ய நேரிட்டது என்று உரைத்தான். 'சிறியன சிந்தியாதா'னாகிய வாலி மனம் மாறி இராமனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டி, அவன் பெருமை கூறித் துதித்தான். தன் தம்பி சுக்கிரீவன் |