| தன்மேனியளாய் அவள், தாயினும் அன்பு தாழ ‘என்மேல்முடியாதன’ என்று இனிது ஏத்திநின்றாள் பொன்மேனி யனும்நெடிது ஆசி புனைந்துபோனான்-- |
அவள் - அந்தச் சுரசை; தன் மேனியளாய் - தனக்குரிய இயல்பான உடம்பைப் பெற்றவளாய்; உடல் வீக்கம் நீங்கி - உடலின் பருமன் நீங்கி; தாயினும் அன்பு தாழ - தாயைவிட அன்பு அதிகரிக்க; மேல் - இனிமேல்; முடியாதன என் என்று - உன்னால் செய்ய முடியாதவை யாவை? என்று கூறி; இனிது ஏத்தி நின்றாள் - வாழ்த்தி நின்றாள்; பொன் மேனியனும் - பொன் போன்ற திருமேனி பெற்ற அனுமன்; மின்மேல் படர் நோன்மையனாய் - மின்னலின் மேல் படர்ந்து செல்லும் வலிமையுடையவனாய்; நெடிது ஆசி புனைந்து போனான் - பெரிய வாழ்த்துக்களை அணிந்து சென்றான். சுரசை இயல்பானமேனி பெற்று உன்னால் செய்ய முடியாத செயல்கள் இல்லை என்றாள். அனுமன் சுரசையின் ஆசி பெற்றுச் சென்றான். ‘முடியாதது என் எனக்கேல் இனி’ என்று நம்மாழ்வார் பேசினார் (2-6,7) சுரசை என்மேல் முடியாதன என்று கூறினாள். (72) கலிநிலைத்துறை 4813. | கீதங்கள்இசைத்தனர் கின்னரர் கீதம்நின்ற பேதங்கள்இயம்பினர் பேதையர் ஆடல்மிக்க பூதங்கள்தொடர்ந்து புகழ்ந்தன பூசு ரேசர் வேதங்கள்இயம்பினர் தென்றல் விருந்துசெய்ய. |
கின்னரர்கீதங்கள் - கின்னரர்கள்பாடல்களை; இசைத்தனர் - பாடினார்கள் ; பேதையர் கீதம் நின்ற - மகளிர்கள் பாடல்கள் அமைந்த; பேதங்கள் இயம்பினர் - இசை விகற்பங்களைப் பாடினார்கள்; ஆடல்மிக்க பூதங்கள் - ஆடுதலிற் சிறப்புப் பெற்ற பூத கணங்கள்; தொடர்ந்து புகழ்ந் தன- விடாமற் |