பக்கம் எண் :

கடல் தாவு படலம்57

தன்மேனியளாய் அவள், தாயினும்
      அன்பு தாழ
‘என்மேல்முடியாதன’ என்று இனிது
      ஏத்திநின்றாள்
பொன்மேனி யனும்நெடிது ஆசி
      புனைந்துபோனான்--

அவள் - அந்தச் சுரசை; தன் மேனியளாய் - தனக்குரிய இயல்பான
உடம்பைப் பெற்றவளாய்; உடல் வீக்கம் நீங்கி - உடலின் பருமன் நீங்கி;
தாயினும் அன்பு தாழ - தாயைவிட அன்பு அதிகரிக்க; மேல் - இனிமேல்;
முடியாதன என் என்று - உன்னால் செய்ய முடியாதவை யாவை? என்று
கூறி; இனிது ஏத்தி நின்றாள் - வாழ்த்தி நின்றாள்; பொன் மேனியனும் -
பொன் போன்ற திருமேனி பெற்ற அனுமன்; மின்மேல் படர்
நோன்மையனாய் -
மின்னலின் மேல் படர்ந்து செல்லும்
வலிமையுடையவனாய்; நெடிது ஆசி புனைந்து போனான் - பெரிய
வாழ்த்துக்களை அணிந்து சென்றான்.

சுரசை இயல்பானமேனி பெற்று உன்னால் செய்ய முடியாத செயல்கள்
இல்லை என்றாள். அனுமன் சுரசையின் ஆசி பெற்றுச் சென்றான். ‘முடியாதது
என் எனக்கேல் இனி’ என்று நம்மாழ்வார் பேசினார் (2-6,7) சுரசை என்மேல்
முடியாதன என்று கூறினாள். (72)

                                                                               கலிநிலைத்துறை

4813.

கீதங்கள்இசைத்தனர் கின்னரர்
      கீதம்நின்ற
பேதங்கள்இயம்பினர் பேதையர்
      ஆடல்மிக்க
பூதங்கள்தொடர்ந்து புகழ்ந்தன
      பூசு ரேசர்
வேதங்கள்இயம்பினர் தென்றல்
      விருந்துசெய்ய.

கின்னரர்கீதங்கள் - கின்னரர்கள்பாடல்களை; இசைத்தனர் -
பாடினார்கள் ; பேதையர் கீதம் நின்ற - மகளிர்கள் பாடல்கள் அமைந்த;
பேதங்கள் இயம்பினர் -
இசை விகற்பங்களைப் பாடினார்கள்; ஆடல்மிக்க
பூதங்கள் -
ஆடுதலிற் சிறப்புப் பெற்ற பூத கணங்கள்; தொடர்ந்து புகழ்ந்
தன-
விடாமற்