| ‘இங்குஆர்கடத்திர்’ எனை என்னா எழுந்தாள் அங்கார தாரைபெரிது ஆலாலம் அன்னாள். |
பெரிது ஆலாலம்அன்னாள் -பெரிய ஆலகால விடத்தைப் போன்ற;அங்கார தாரை - அங்கார தாரை என்பவள்; அப்பொங்கு புனல் ஆர்கலி- அந்த பொங்குகின்ற புனலைப் பெற்றுள்ள கடல்; வேறேயும் ஒன்று -தன்னினும் வேறுபட்ட ஒரு; வெங்கார் நிறப் புணரி - வெப்பமான கரிய நிறம்பெற்ற கடலை; தர - பெற்றெடுத்து; பொலிவதே போல் - விளங்குவதையேஒப்ப (தோன்றி); எனை - என்னை; இங்கு ஆர் கடத்திர் - இங்கேதாண்டிப் போகின்றீர்; என்னா - என்று கூறி; எழுந்தாள் - வளர்ந்தாள். கடல் மற்றொருகடலை ஈன்றதுபோல் அங்கார தாரை கடலில் தோன்றினாள். அவள் என்னை எவர் கடக்கப் போவது என்று கூறினாள். அங்கார தாரை - நெருப்புக் கொழுந்து போன்றவள். ஒன்று புணரியை - எனக்கூட்டி யுரைக்கப் பெற்றது. (75) 4816. | காதக்கடுங்குறி கணத்து இறுதி கண்ணாள் பாதச்சிலம்பின்ஒலி வேலைஒலி பம்ப, வேதக்கொழுஞ்சுடரை நாடிநெடு மேல்நாள் ஓதத்தின்ஓடும்மது கைடவரை ஒத்தாள். |
கணத்து இறுதி -ஒருகணத்தின் முடிவுக்குள்; காதம் - காத தூரத்திலுள்ள பொருளை; கடுங்குறி கண்ணாள் - வேகமாக அறியும் கண்களையுடைய அங்கார தாரை; பாதச் சிலம்பின் ஒலி - பாதத்தின் சிலம்பின் ஒலியாலே; வேலையொலி பம்ப - கடல் அலையின் ஒலி அடங்க; நெடுமேல் நாள் - நீண்ட காலத்துக்கு முன்; வேதக் கொழுஞ்சுடரை - வேதங்கள் உணர்த்தும் ஒளிமயமான திருமாலை; நாடி - போர்செய்ய விரும்பி; ஓதத்தின் ஓடும் - கடலிலே ஓடி வருகின்ற; மது கைடவரை - மதுவையும் கைடவனையும்; ஒத்தாள் - ஒத்திருந்தாள். அங்காரதாரை -நீண்ட தூரத்தில் உள்ள பொருள்களைக் காணும் கண்களைப் பெற்றவள். அவள் திருமாலுடன் போர் செய்ய வந்த மது கைடவர்களைப் போன்றிருந்தாள். கடும்குறி - வேகமாக அறியும். கலுழன்தன் கடுமையிற் கரந்தான் (6237) (வேலை - அலை பம்பு - அடங்கி) (76) |