10. அக்ககுமாரன் வதைப்படலம் இராவணனது இளைய மகனானஅக்கன் என்பவன், அனுமனோடு போர் செய்து மடிந்ததைப் பற்றிக் கூறுவது இந்தப் படல்ம். அக்ககுமாரன்அனுமனுடன் போருக்கு எழ இராவணனிடம் விடைபெறுதல் 5668. | கேட்டலும்,வெகுளி வெந் தீக் கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி, தோட்டு அலர்தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு எற, ஊட்டு அரக்குஉண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை, தாள்-துணைதொழுது, மைந்தன் தடுத்து, ‘இடைதருதி’ என்றான். |
ஊட்டு அரக்குஉண்ட போலும் நயனத்தான் - பூசப்பட்ட அரக்குப்படியப்பெற்றது போன்ற செந்நிறமாய் விளங்கும் கண்களை உடைய இராவணன்; கேட்டலும் - (பஞ்ச சேனாபதிகளும் சேனைகளும் இறந்தனர் எனக்) கேட்டவுடன்; வெகுளி வெந்தீக்கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி - கோபக் கொடுந்தீ,பொங்கி வருகின்ற பெருமூச்சை உடையவனாகி; தோட்டு அலர் தெரியல்மாலை - இதழ்கள் மலரப் பெற்றதும் தேர்ந்து தொடுக்கப்பட்டதுமானஅவனுடைய மாலை; சுறுக் கொண்டு ஏற - பொசுங்கி நாற்றம் பரந்து வீச;ஒருப் பட்டானை - போருக்கு ஆயத்தமாய் நின்ற இராவணனை; மைந்தன் -அவன் மகனாகிய அக்ககுமாரன்; தாள் துணை தொழுது - அவனது இரண்டுபாதங்களிலும் வணங்கி; தடுத்து - அவனைப் போருக்குச் செல்லாமல் தடுத்து;‘இடை தருதி’ என்றான் - (யான் சென்று போர் புரியுமாறு எனக்கு)‘வாய்ப்புத் தருக’ என்று கேட்டுக் கொண்டான். |