12. பிணி வீட்டுபடலம் பிரம்மாத்திரத்தால் கட்டுண்ட அனுமன், சிறிது பொழுது தாழ்ந்து, அக்கட்டினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டதைப் பற்றிக் கூறுவது இந்தப் படலம். கட்டுப்பட்டஅனுமனைக் கண்ட அரக்கர் நிலை கலி விருத்தம் 5805. | ‘எய்யுமின்; ஈருமின்; எறிமின்; போழுமின்; கொய்யுமின்குடரினை; கூறு கூறுகள் செய்யுமின்;மண்ணிடைத் தேய்மின்; தின்னுமின்; உய்யுமேல்,இல்லை நம் உயிர்’ என்று ஓடுவார். |
எய்யுமின் -(இந்தக்கொடிய குரங்கை) அம்பு கொண்டு எய்யுங்கள்; ஈருமின் - வாள் கொண்டு வெட்டுங்கள்; எறிமின் - ஈட்டியால்குத்துங்கள்; போழுமின் - கோடாலியால் பிளவுங்கள்; குடரினை கொய்யுமின் - இதன் குடலைப் பறித்திடுங்கள்; கூறு கூறு செய்யுமின் - இதனைத்துண்டு துண்டுகளாக செய்யுங்கள்; மண்ணிடைத் தேய்மின் - தரையில் தேய்த்து அழியுங்கள்; தின்னுமின் - இதன் உடல் தசையைத் தின்னுங்கள்; உய்யுமேல் நம் உயிர் இல்லை - இது பிழைத்துப் போகுமானால், நமது உயிர் இல்லாததாகும்; என்று ஓடுவார் - என்று சொல்லிக் கொண்டு, (அனுமன் இருக்கும் இடத்துக்கு பல அரக்கர்கள்) ஓடி வந்தார்கள். இது பிழைத்தால்நம்மைக் கொன்று விடும் என்பது பிணிப்புண்ட அனுமனைக் கண்ட அரக்கர்கள் கருத்து. அரக்கர்கள் தம் கோப எண்ணத்தை வெளிப்படுத்தியது. (1) 5806. | மைத் தடங்கண்ணியர், மைந்தர், யாவரும், பைத் தலை அரவுஎனக் கனன்று, ‘பைதலை இத்தனைபொழுதுகொண்டு இருப்பதோ ?’ எனா, மொய்த்தனர்;கொலை செய முயல்கின்றார், சிலர். |
|