மிகைப் பாடல்கள் 1. கடல் தாவு படலம் 383. | சென்றனன்,இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி- திண் தோள் வன் திறல்அனுமன்-வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி, பொன் திணிசிகர கோடி மயேந்திரப் பொருப்பின் ஏறி, நின்றிடும்தன்மை எம்மால் நிகழ்த்தலாம் தகைமைத்து ஆமோ ? |
அனுமன்இராமபிரானின் திருவடியை மனத்திலே தியானித்து கடலைக் கடக்க எண்ணி மகேந்திர மலையில் நிற்கும் தன்மை எம்மால் கூறும் தன்மை உடையதோ. 384. | இமையவர்ஏத்த வாழும் இராவணன் என்னும் மேலோன் அமை திரு நகரைச்சூழ்ந்த அளக்கரைக் கடக்க, வீரன், சுமை பெறு சிகரகோடித் தொல் மயேந்திரத்தின், வெள்ளிச் சிமையமேல்நின்ற தேவன் தன்மையின், சிறந்து நின்றான். |
மகேந்திர மலையில்நிற்கும் அனுமன் கயிலை மலையில் நிற்கும் சிவபெருமான் போன்றான். அளக்கர் - கடல் வெள்ளிச்சிமயம் - கயி்லை. இவ்விரண்டு பாடல்கள் இப்படலத்தின் முன்னர் உள்ளன. இவற்றொடு கிட்கிந்தா காண்டம் மயேந்திரப்படல இறுதி நான்கு பாடல்களும் வரிசைமுறைமாறிக் கலந்துள்ளன. |