பொருந்திய பெருமையுடன் முடிசூட்டும் உரிமைப் பணிகளைப் புரிவீராக; என்றான். |
முன்றில்; அரண்மனை முற்றம். ஒன்றுதல் - பொருந்துதல். |
(174) |
பிரகலாதன் முடிசூடி மூவுலகும் ஆளுதல் |
6363. | 'தே மன், உரிமை புரிய திசை முகத்தோன் |
| ஓமம் இயற்ற, உடையான் முடி சூட்ட, |
| கோ மன்னவன் ஆகி, மூஉலகும் |
| கைக்கொண்டான்- |
| நாம மறை ஓதாது ஓதி, நனி உணர்ந்தான். |
|
நாம மறை- புகழ் மிகுந்த நான்கு வேதங்களையும்; ஓதாது ஓதி- முறையாக ஆசிரியனை அடைந்து பயிலாது, இறையருளால் தானே பயின்று; நனி உணர்ந்தான் - மிக நன்றாக உணர்ந்தவனான பிரகலாதன்; தேமன் உரிமை புரிய- தேவர்களுக்கு மன்னனான இந்திரன் முடி சூட்டு விழாவுக்குரிய பணிகளைப் புரிய; திசைமுகத் தோன்- நான்கு திசைக்கும் உரிய நான்கு முகங்களை உடையபிரமன்; ஓமம் இயற்ற- விழாவுக்கான வேள்வியைச் செய்ய; உடையான் முடிசூட்ட - எல்லா உலகங்களையும் உடையவனாகிய சிங்கப்பிரான் (திருமால்) தனது திருக்கரத்தால் மணிமுடிசூட்ட; கோமன்னவன் ஆகி மூவுலகும் கைக் கொண்டான்- சக்கரவர்த்தியாகி மூன்றுலகங்களும் தனக்கே உரியதாகக் கைக் கொண்டு ஆட்சி செய்தான். |
வேதங்கள் புகழ் மிகுந்தவை யாதலின் 'நாமமறை' என்றார். நாமம் - புகழ். இறையருளால் தானே ஓதி நன்குணர்ந்தவன் என்பதை 'ஓதாது ஓதி நனிஉணர்ந்தான்' என்றார். தே மன் - தேவர்தலைவன். உலகம் முழுதுடையான் உவந்து முடிசூட்ட மூவுலகுக்கும் உரிமையுடையவனாய் ஆட்சி செய்தான் என்பதால் கோமன்னவனாகி மூவுலகும் கைக் கொண்டான் என்றார். கோமன்னவன் - அரசர்க்கு அரசன் (சக்கரவர்த்தி) |
(175) |
வீடணன் முடிவுரை |
6364. | 'ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம்பெருமான் ! என் |
| மாற்றம் |
| யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல், |