மேதாவிகட்கு எல்லாம் - அறிஞர்களுக்கெல்லாம்; மேலானமேன்மையான- மேம்பட்ட மேலோனாகிய வீடணன்; ஈது ஆகும்முன் நிகழ்ந்தது - முன்பு நிகழ்ந்த இரணியன் கதை இதுவாகும்; எம்பெருமான்- எமது தலைவனே !; என் மாற்றம் யாதானும்- என்னுடைய பேச்சு எதுவாயினும்; ஆக நினையாது இகழ்தியேல் - உனது நன்மைக்காவது என்று நினைக்காமல் இகழ்வாயானால்; தீதாய் விளைதல் - தீமை உண்டாவது; நனி திண்ணம் - மிகவும் உறுதியாகும்; எனச் செப்பினான்- என்று கூறினான். |