| உச்சிச் சென்றான்ஆயினும், வெய்யோன், உதயத்தின் |
| குச்சிச் சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர். |
|
அச்சின் திண்தேர் ஆனையின், மாமேல் - அச்சடைய வலிய தேரின் மேலும் யானைகள் மேலும் குதிரைகள் மேலும்; காலாளின் மொய்ச்சுச் சென்றார்- காலாட் படையோடு நெருங்கிப் போர்க்குச் சென்ற அரக்கர்களின்; மொய் குருதித் தாரைகள் முட்ட - (உடம்பிலிருந்து) வெளிவந்த இரத்த வெள்ளங்கள் பாய்ந்ததால்; வெய்யோன் உச்சிச் சென்றான் ஆயினும்- கதிரவன் வானின் நடு உச்சியை அடைந்தான் ஆனாலும்; உதயத்தின் முச்சிச் சென்றான் - உதயமலையில் தோன்றும் செங்கதிரவன்; ஒத்துளன் ஆகும் குறி காணீர்- ஒத்திருக்கும் நிலையைப் பாருங்கள். |
(20) |
9601. | 'கால் தோய் மேனிக் கண்டகர் கண்டப்படு காலை, |
| ''ஆறோ!'' என்ன, விண் படர் செஞ் சோரியது ஆகி, |
| வேறாய் நின்ற வெண் மதி செங் கேழ் நிறம் விம்மி, |
| மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர். |
|
கால்தோய் மேனிக் கண்டகர் - கருநிற உடல் கொண்ட அரக்கர்; கண்ட படுகாலை- துண்டு படும் போது; ஆறோ என்ன- இது ஆறோ எனக் கண்டோர் கருத; விண்படர் செஞ்சோரியது ஆகி - வானில் பாயும் சிவந்த இரத்தமாகி; வேறாய் நின்ற வெண்மதி - வேறாக நின்ற வெண்ணிறச் சந்திரன்; செங்கேழ் நிறம் விம்மி - செந்நிறம் மிகுந்து; மாறுஓர் வெய்யோன் மண்டிலம் - மாறுபட்ட ஒரு கதிரவனின் மண்டிலம்; ஒக்கின்றது காணீர் - போன்றுள்ளதைப் பாரீர். |
(21) |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
9602. | 'வான் நனைய, மண் நனைய, வளர்ந்து எழுந்த |
| கொழுங் குருதி மகர வேலை - |
| தான் நனைவுற்று எழும் பறவைச் சிறை தெளித்து, |
| புது மழையின் துள்ளி தாங்கி, |
| மீன் அனைய நறும் போதும், விரை அரும்பும், |
| சிறை வண்டும், நிறம் வேறு எய்தி, |
| கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற |
| போன்று ஒளிர்வ காண்மின்! காண்மின்! |