| படுங் கமல மலர் நாறும் முடி பரந்த |
| பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை, |
| தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே |
| எனப் பொலியும் தகையும் காண்மின்! |
|
நெடும் படை வாள் நாஞ்சில் உழுநிணச் சேற்றின் - நீண்டவாளாம் கலப்பையாக உழுத கொழுப்பாகிய சேறுள்ளதாலும்; உதிரநீர் நிறைந்த காப்பின் - இரத்தமாம் நீர்நிறைந்த தேக்கமுள்ளதாலும்; கடும்பகடு படி கிடந்த கரும்பரப்பின்- (விரைந்து செல்லும் எருமைகளோடு தரையில் கிடந்த பரம்பு அடிக்கும் பலகை கொண்டுள்ளது போல) விரைந்து செல்லும் யானைப்பகடு படிந்த கரிய பெரும்பரப்பையுள்ளதாலும்; இனமள்ளர் பரந்த கையில் - (இரைமாத்த உழவர் பரவியுள்ள மக்கள் போல்) இனமொத்த வீரர் பரவிய பக்கங்கள் உள்ளதாலும்; படுங்கமல மலந் நாறும் முடிபரந்த பெருங்கிடக்கைப் பரந்த -(களையுள்ள தாமரை மலரோடு நாற்று முடிகள் கிடந்த பெரிய களங்கள் போல) தலைமாலையாகத் தாமரை சூடியதால் மணம் வீசும் முடிமகுடங்கள் கிடக்கும் பெரிய கிடக்கைகள் உள்ளமையாலும்; பண்ணை - (வயல்) வீரரின் பரந்த கூட்டம் உள்ள;தடம்பணையின் நறும்பழனம் தழுவியதே - எனப் பொலிவும் தகையும் காணீர். பெரிய மருதநிலம் பரப்பினை உடைய (போர்க்களம்) நறுமணம் வீசும் வயல்; எனப் பொலியும் தகையும் காண்மின் - எனத்தோன்றும் தன்மையையும் பாருங்கள். |
(25) |
9606. | 'வெளில் தீர்த்த வரை புரையும் மிடல் அரக்கர் |
| உடல் விழவும், வீரன் வில்லின் |
| ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்ஏறு |
| பல படவும், உலகம் கீண்டு |
| நளில் தீர்த்த நாகபுரம் புக்கு, இழிந்த |
| பகழி வழி நதியின் ஓடி, |
| களிறு ஈர்த்துப் புக மண்டும் கடுங் குருதித் |
| தடஞ் சுழிகள் காண்மின்! காண்மின்! |
|
வெளில் தீர்த்த வரைபுரையும்- வெற்றிடமில்லாத மலையை ஒத்த; மிடல் அரக்கர் உடல் விழவும் - வலிமை மிக்க அரக்கரின் உடல்கள் கீழே விழவும்; வீரன் வில்லின் ஒளிறு ஈர்த்த - இராமன் வில்லின் ஒளிவீசும் காதளவு இழுக்கப்பெற்ற; முழுநெடு நாண் உரும் ஏறு பலபடவும்- முழுமையும் நீட்சியுமுடைய நாண் ஒலி |